ஜி. ஏ. கௌதம் நினைவிருக்கிறதா ? முன்னால் காதலியைமீண்டும் காதலிக்கும் ஒருவனின்கவிதையொன்றை எழுதும் முன்என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்… நினைவிருக்கிறதா !? நீ காதலிக்கப்பட்டமுதல் தருணம் ! அவள் கண்கள்முழுதும் நிறைத்தகாதலின் பூரணம் கண்டுநீ மகிழ்ந்த தருணம் ! கண்சிமிட்டாமல் பார்த்தபடிமடியிலிருந்து இதழுக்குநத்தையாக நகர்ந்துஉன் காதலைமுத்தத்தில் சொன்ன விதம் ! யாருமற்ற உன் வாழ்வின் பாதைஅவள் பாதங்களில் முடியும்ரகசியம் அறிந்த அந்த இரவு ! அவள் கல்லூரியின்மரங்கள் அடர்ந்த பாதையில்சிந்திய மலர்கள்உங்கள் பாதங்களை ஏந்திக்கொள்ளஅவள் கரங்களை இறுகப்பற்றியபடிஅவளுடன் நடந்த […]
தி.ஜா.வின் மனதிலே குடமுருட்டி ஆற்றங்கரை வாழை,பலா,மா தோட்டங்கள் சத்திரம், பிள்ளையார் கோவில். வலப்பக்கம் அக்ரஹாரம் இடப்பக்கம் வேளாளர் தெரு மேற்கே காவிரி கிழக்கே அரிசன தெரு இத்தனை அழகோடு கீழவிடயல் அவரோட மனதினிலே அழியாக்கோலங்கள். நதியோடு விளையாடி ராகங்கள் பலபாடி மோகமுள் படைத்துவிட்டார். காலமெனும் நதியினிலே காவியப்படகில் ஏற்றிவிட்டார். காதலையும், காமத்தையும் கணக்கோடு கலந்துவிட்டார். இனிவரும் தலைமுறைக்கும் மோகதீப தரிசனத்தை காலவெளியில் கலந்துவிட்டார். ஜெயானந்தன்.
நிழலாடும் நுரைமங்கள். தேநீரின்உறிஞ்சு சுகத்திற்கிடையில்மீளும்இந்நினைவினைவானொலியில்ஒலித்தபாடல் தான்மீளருவாக்கியதுஆற்றில்குளிக்க வந்தஇவ்வேளையில்.அநேக கற்பிதங்களில்ஆட்பட்டுக்கிடந்தஅன்றைய நாளில் பார்வைகளைத்தவிரபெரிதாகபரிமாறியதில்லைகாதலில்கசிந்துருகினாலும்.கையொடியகாலையில்கடலை கொல்லைக்கு தண்ணீர் இறைத்ததுகண நேரம் தரிசனம்கண்டுவிடத்தான்என்பதைமுதல் வகுப்பில்வாங்கும்பிரம்படியின்போதானவேதனை தாழாதுதுடித்தழும் உன்முக வாடல்நிழலாடுகிறதுநீ சென்ற பாதையைபார்த்தவாறுஇப்பொழுதும். வறுமையின் கோலமெனவருந்தினார்கள்எனக்கெனவெனஅறியாத அநேகர்கள்ஆறு நாளும்அதே பாவாடை தாவாணியில்வருவதைவாஞ்சையுடன்நினைத்து.சிதிலமடைந்த படித்துறையில்முத்தமிடும் பெயர்களின்முதலெழுத்து அணுக்கம்தவிரவேறெதுவும் நடக்கவில்லைகாதலில்கண்ணியம் கொண்டதனால்.தனித்தோடி தலைமறைவாகவாழ்ந்துசுயாதீன காதலெனசுடரொளி காட்டி இருக்கலாம்தான்படி தாண்டாதவாழ்க்கையை பழகித் தொலைக்காமல்இருந்தாலெனமருகுகிறதுமனம்தாமிரபரணியில்தலைமுழுகவரும்பொழுதெல்லாம்தவிப்பாககரையேற முடியாமல்மூழ்கி. மீட்டலின் பொருட்டான கரிசனம். மறு கன்னத்தைதிருப்பிக்காட்டாதபொழுதுபரிவுகளை பேசுவதுபயனற்றதுபுரிதல் நிகழ்வதற்கு முன்னால்.கவனம் பெறுவதற்காககாட்டப்படும்கன்னமெனகடிந்தாலும் சிவந்து கொண்டேஇருக்கிறதுசெய்வதறியாதுஅன்றாடம்மேலதிக நம்பிக்கைகள் கொண்டு.நீங்கள்சிந்தை கலங்கியவனெனசொன்னாலும்புரியுமொருகணத்திற்கானகாத்திருப்பெனஅறியும் பொழுதுவழியும்கண்ணீர் துடைக்காமல்வெகு […]
சசிகலா – விஸ்வநாதன் அந்தி சாயும் நேரம் தேநீர் கோப்பை கையில் எதிரே நாற்புறமும் வரிசை கட்டி நிற்கும் பச்சையும் நீலமும் ஊதாவும் பழுப்பிலும் மலைத் தொடர் மடிப்பு; விரிந்த நீல வானில் வெண் பனிக்கட்டிகள் வெண் மஞ்சு மஞ்சம். மெல்ல மெல்ல கதிரவன் கீழே இறங்க; மென் காற்று அலை; மேனி சிலிர்த்தது. சாரல் மழையில்; வானில் வில் ஒன்று தோன்றி மறைவதற்குள்; துணை வானவில். கண்மூடி திறப்பதற்குள்; கண் முன்னே ஒரு அற்புதம்! காணுதல் […]
வேண்டும்போதுதண்ணீருண்டுமரத்துக்குக்கவலையில்லைமக்கியதுமண்ணிலுண்டுபுழுக்களுக்குக்கவலையில்லைபசிக்கும்போதுமான்களுண்டுபுலிகளுக்குக்கவலையில்லைதேடும்போதுகனிகளுண்டுகிளிகளுக்குக்கவலையில்லைஈனுவதுபால் தரும்குட்டிகளுக்குக்கவலையில்லைபுழுக்களைப் பூச்சி தின்னும்பூச்சிகளைத் தவளை தின்னும்தவளைகளைப் பாம்பு தின்னும்பாம்புகளைக் கருடன் தின்னும்கருடனை மண் தின்னும்எது எதைத் தின்றும்எதுவும் அழியவில்லைஎதற்கும் கவலையில்லைஎன்னில் முளைப்பதும்எனக்குள் கிடப்பதும்என்னுடையதல்ல வென்றமண்ணுக்கும்கவலையில்லைகொண்டுவந்த தொன்றுமிலைகொண்டுசெல்வ தொன்றுமில்லைஉணர்ந்தால் போதும்ஒருபோதும் கவலையில்லைஅமீதாம்மாள்
ஜெயானந்தன். அவரவர் வீட்டை திறக்க அவரவர் சாவி வேண்டும். எவர் மனம் திறக்கும் எவர் மனம் மூடும் எவருக்கும் தெரியாது. சில முகங்களில் – துன்ப ரேகைகள் ஓடும். பல முகங்களில் – இன்ப தூண்கள் தெரியும். யாரோடும் வீதியில் நடக்கலாம். வீதியெங்கும் காலடிச் சுவடுகள் ரேகையில் எத்தனை வாழ்க்கை கனவுகள். பேசிக்கொண்டே செல்லும் வழியில் நடைப்பிணங்கள் ஏராளம். இன்பமும் துன்பமும் நாடகம்தானே இதில் நீயும் நானும் விதிவிலக்கல்ல……………………..!
வெங்கடேசன் நாராயணசாமிஇது ஏற்கனவே நடந்திருக்கிறது.முன்னமே உங்களை அறிந்திருக்கிறேன்.ஏதோவோர் மதுரை ஞாபகம் போல்எங்கேயோ பார்த்துப் பழகின பேசிய ஞாபகம்!எல்லாமே அனுபவித்ததாய்த்தான் தெரிகிறது. புதிதாக ஒன்றும் இல்லை. காலம் இவ்வுலகை பட்சணமாய்த் திண்கிறது.ஓட்டைக் குடத்தில் ஒழுகும் நீர்போல்நொடிகள் போய்க்கொண்டிருக்கின்றன.காலம் உண்ணும் இவ்வாழ்க்கையைக்காலாதீதன் நான் கூறுகிறேன்!கோடி பிரம்மாக்களை உண்டுவிட்டேன்.எத்தனை தடவை இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நடந்தாயிற்று! பார்த்தாயிற்று!எத்தனை தடவை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குகீதோபதேஶம் செய்தாயிற்று! எத்தனையெத்தனை தேவதைகள் அஸுரர்கள் மானுடர்கள் தாவர-ஜங்கமங்களனைத்தையும்,எவ்வளவோ பேரைப் பார்த்துவிட்டேன்.எத்தனையெத்தனை மஹாப் பிரளயங்கள்,எத்தனையெத்தனை மஹா ஸ்ருஷ்டிகள்,எத்தனையெத்தனை மஹா ஸ்திதிகள்!காலம் வாழ்க்கையை […]
அமீதாம்மாள் இட்லி வேணுமா?தோசை வேணுமா?தயாரா இருக்குமாக்கி நூடுல்ஸ்கேவூர் கூழ்உடனே தரலாம்நேத்து வாங்கியசப்பாத்தி, பரோட்டாஉப்புமா, இடியப்பம்எல்லாம் திடீர் வகைகள்வேணுமா?அட! மறந்துட்டேன்பழசு புடிக்குமேதண்ணிவிட்ட சோறுதயிர், கருவாடு தரவா?சொல்லுங்கஎன்ன வேணும்?யோசித்துக்கொண்டேதொலைக்காட்சியைப்பார்க்கிறேன்ரொட்டிஎதிர்பார்த்து……ஒட்டிய வயிறோடு…..ஆயிரமாயிரம்அகதிகள்அமீதாம்மாள்
வாழப்போகும் பெருமையை விதை சொன்னது வாழும் பெருமையை மரம் சொன்னது வாழ்ந்த பெருமையை விறகு சொன்னது மூன்று பேரும் இறைவனைக் கேட்டனர் ‘எங்களில் யார் பெரியவன்’ இறைவன் சொன்னான் ‘உங்கள்முன் நான் சிறியவன்’ அமீதாம்மாள்
ஜெயானந்தன். முப்பாட்டன் வீடு பாட்டனிடம் இல்லை. பாட்டன் வீடு தாத்தனிடம் இல்லை. தாத்தன் வீடு தந்தையிடம் இல்லை. தந்தை வீடு என்னிடம் இல்லை. என் வீடு உன்னிடம் இல்லை. உன் வீடு என்னிடம் இல்லை. உன் வீடு என் வீடு எவன் வீடு ! மலையெல்லாம் அவன் வீடு மனமெங்கும் அருள்வீடு. பிறவிதொறும் வீடுவீடாய்………, பிறவா வீடு வேண்டும். பிறப்பை அறுக்கும் பேரின்பேச் சுடரே ! பேரோளியே!!! ஜெயானந்தன்.