செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 7

This entry is part 9 of 9 in the series 24 பெப்ருவரி 2019

சிபாரிசு செய்யும் முறைகளே. விடியோ உலகில் செயற்கை நுண்ணறிவுத் துறை இன்றும் பெரிதாக முன்னேற்றம் எதையும் முன் வைக்கவில்லை என்பது என் வாதம்.விவரமாக நெட்ஃப்ளிக்ஸ் சிபாரிசு முறைகளைத் தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் இங்கு நீங்கள் மேலும் ஆராயலாம்:The Amazon Prime and Netflix recommendations are centered around metadata of the videos and not on the videos themselves. There is very little true AI that is going on […]

இந்தியாவில் படிப்பறிவின்மையின் வேர்கள் -மறு திட்டம்

This entry is part 8 of 9 in the series 24 பெப்ருவரி 2019

ஒருகாலத்தில், இந்தியாவில் எல்லா இடங்களிலும் கோவில்கள் இருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் இருந்தது. கோவில்கள் வணக்கத்தலங்கள் மட்டுமல்ல. அவை இந்திய கல்வி முறையின் மையங்கள். ஒவ்வொரு கோவிலும் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி தரும் நிலையங்களாக இருந்தன. பெரும் கோவில்கள் மேற்படிப்பு கல்வி நிலையங்களாக இருந்தன. முக்கியமான கோவில்கள் கணிதம், வானவியல் போன்றவற்றை கற்பிக்கும் ஆராயும் இடங்களாக இருந்தன. கோவில் கல்விநிலையங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு, தொழில்முறை ஆசிரியர்கள் பேராசிரியர்களை கொண்டவையாக இருந்தன. கல்வி அனைவருக்குமானதாக இருந்தது. இன்று […]

2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது

This entry is part 1 of 9 in the series 24 பெப்ருவரி 2019

Japan Eagle Hayabusu -2 Lands on Asteriod Ryugu [February 22,  2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://youtu.be/qeMwAdquDYM https://youtu.be/8H4aZX_8hMA https://youtu.be/mgfc0jliVjA ++++++++++++++++++ நிலவினில் முதற்தடம் வைத்துநீத்தார் பெருமை யாய்நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்தவ்விய தளவுளவி களை நாசாவும்ஈசாவும் கொண்டு இறக்கின !வால்மீன் வயிற்றில் அடித்துதூசிகளை ஆராய்ந்தார்நாசா விஞ்ஞானிகள் !விண்வெளியில் வால்மீன் ஒன்றைவிரட்டிச் சென்று வால் வீசியதூசியைப் பிடித்து வந்தார்காசினிக்கு !வக்கிரக் கோள் மாதிரி எடுத்துவையத்தில் இறக்கிடும்இப்போது ஜப்பானின்ஹயபூசா […]

துணைவியின் இறுதிப் பயணம் – 14

This entry is part 7 of 9 in the series 24 பெப்ருவரி 2019

சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ [43] ஈமச் சடங்கு உயிருள்ள மானிடப் பிறவிக்கு உரிய மதிப்பளிப்பது நியாயமே, மனித நேயமே. அது போல் உயிரிழந்த சடலத்துக்கும் பயண முடிவில் மரியாதை புரிவது மனித நாகரீகம். மனித நேயமே. பிரம்மாண்ட மான வரலாற்றுச் சின்னமான பிரமிடைக் கட்டினர் ஃபெரோ வேந்தர்கள் தமது உயிரிழக்கும் சடலத்துக்கு முன்பாகவே ! மும்தாஜ் […]

ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 6 of 9 in the series 24 பெப்ருவரி 2019

ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் 1.பிழைப்பு ”ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க எங்களை விட்டால் யார்?” ”கோழைகளல்ல நாங்கள் மேடைதோறும் தூக்கவில்லையா வாள்?” ”வாழையடிவாழையாக எங்களுக்கே தானே உங்கள் வாக்கு” என்பார் மட்டந்தட்டித் தீர்க்கவேண்டிய எதிர்க்கட்சித் தலைவரை கட்டங்கட்டிக் கச்சிதமாய்ப் போட்டுத்தாக்கிவிட்டு  அவரவர் கட்சி கொடுத்திருக்கும் இரண்டு லட்சம் அல்லது இருபது லட்சம் விலையுள்ள காரில் கட்டுசெட்டாக ஏறிக்கொண்டு  சுவர்களிலெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கும் தத்தம் தானைத்தலைவர்களின் திருவுருவப்படங்களை தரிசித்தபடியே ’கவரை’ கவனமாகத் திறந்து உள்ளிருக்கும் ரொக்கத்தைத் தம் பைக்குள் திணித்தபின் ’மறவாமல் […]

கவிதையும் வாசிப்பும் கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்து

This entry is part 5 of 9 in the series 24 பெப்ருவரி 2019

வதை சொர்ணபாரதி அட்சயபாத்திரத்தை யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல் திரிந்துகொண்டிருந்தாள் அறச்செல்வி நிலாவில் இருந்துவந்த ஒரு கானகன் சிலகாலம் அப்பாத்திரத்தைச் சுமந்துசென்றான் அக்கரைப் பணத்தில் காலங்களை விற்று மேற்குமலையோரம் பதுங்கிய ஒரு மாயக்காரன் தன் பங்கிற்குக் கொஞ்சம் சுமந்தான் இடைவெளியில் வார்த்தைமலர்களால் வசப்படுத்திய மகிழ்ச்சி மைந்தன் ஒரு துரோகப் பாட்டிசைத்து பாத்திரத்தை வீசிச் சென்றான் எப்போதும் காதலைச் சுமந்தபடி வந்துநின்ற உதயகுமாரனைப் புறந்தள்ளிய அறச்செல்வி பிள்ளைப்பிராயத்து பளிக்கறையில் தஞ்சம் புகுந்தாள் வளர்ந்துநின்ற பளிக்கறையோ அறச்செல்வியைச் சிறைப்படுத்தி தன் ‘ப்ராப்பர்ட்டி’ […]

கவிதையும் வாசிப்பும் ‘ரமேஷ் பிரேதனி’ன்‘காந்தியைக்கொன்றதுதவறுதான்என்ற கவிதையை முன்வைத்து

This entry is part 4 of 9 in the series 24 பெப்ருவரி 2019

‘ரமேஷ் பிரேதனி’ன் — ‘காந்தியைக்கொன்றதுதவறுதான்’ என்ற கவிதையை முன்வைத்து _ லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ரமேஷ் பிரேதனின் இந்த நீள்கவிதையைப் படித்த தாக்கம் இன்னும் அகலவில்லை. உலக இலக்கியத்தின் எந்தவொரு முதல்தரமான, கவித்துவம் மிக்க அரசியல்கவிதையோடும் இணையாக நிற்கக்கூடிய காத்திரமான கவிதை இது. இந்த நீள்கவிதையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனிக் கவிதைகளாக, தன்னிறைவு பெற்ற கவிதைகளாக வாசிக்கப்படத் தக்கவை; பொருள்தரத் தக்கவை. இந்தக் கவிதை அல்லது கவிதைகளில் அங்கிங்கெனாதபடி காந்தி என்ற வார்த்தை அல்லது பெயர் வருகிறது. […]

ஒண்ணும் தப்பில்ல

This entry is part 3 of 9 in the series 24 பெப்ருவரி 2019

-எஸ்ஸார்சி ஒரு எக்செல் சூபர் என் வசம். அதனை வைத்துக்கொண்டு முடிந்த வரைக்கும் இந்தப் பெருங்களத்தூர் ஊரைச்சுற்றிச் சுற்றி வருகிறேன். ஒரு பழைய வண்டி. செகண்ட் ஹேண்டும் இல்லை தேடு ஹேண்டுதான்.அப்படித்தான் என்னால் வாங்கவும் முடிந்தது. நாற்பதாயிரம் கிலோமீட்டர் ஓடிமுடித்தவண்டியை நாலாயிரம் கிலோமீட்டரே ஒடியிருப்பதாக ச்சொன்னார்கள். பேசத்தெரிந்தவர்களின் உலகம்தானே இது.சாமர்த்தியமாகத்தான் என் தலையில் அதனை க்கட்டிவிட்டார்கள்.என் ஆபிசுக்கு முன்னால் நிற்கும் இரும்பு கேட்டில் ஒரு பக்கமாக் சாய்ந்து நின்றுகொண்டு வேண்டா வெறுப்பாக எனக்கு ஒவ்வொருமுறை வ்வணக்கம் சொல்லும் […]

10. மறு தரவுப் பத்து

This entry is part 2 of 9 in the series 24 பெப்ருவரி 2019

மறுதரவு என்றால் மீண்டும் வருதல் என்று பொருள். மனம் கலந்த தலைவி தலைவனுடன் அவன் ஊர் சென்று மணம் புரிந்து அவனை ஏற்றுக்கொண்டு விட்டாள். அவளின் அன்னையும் உறவினரும் அவள் மீது கொண்ட கோபம் தணிந்து விட்டனர். இப்பொழுது தங்கள் இல்லத்துக்குத் தலைவியையும், தலைவனையும் அழைத்து விருந்து வைத்து வாழ்த்த விரும்புகின்றனர். இப்படித் தலைவனும், தலைவியும் மீண்டும் வருவதைக் குறிக்கும் பத்துச் செய்யுள்களைக் கொண்டதால் இப்பத்து இப்பெயர் பெற்றது. ==== 1.மறுதரவுப் பத்து மறுவில் தூவிச் சிறுகருங் […]