குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12

மறு நாள் அதிகாலையில் கண் விழித்த ராதிகா தன் தோழி ஒருத்தியின் வீட்டுக்குப் போய்விட்டு அங்கிருந்தே கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு வழக்கத்தை விடவும் ஒரு மணி நேரம் முன்னதாகப் புறப்பட்டுவிட்டாள். தீனதயாளன் ஏற்கெனவே கிளம்பிப் போய்விட்டிருந்தார். அவள் பத்மஜாவின் வீட்டை அடைந்த…