கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)

This entry is part 32 of 42 in the series 22 மே 2011

  ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா         நள்ளிரவுப் பொழுதில் துள்ளி அலறினேன் : “நான் கொண்டுள்ள காதலில் வசித்து வருவது யார் ?” நீ சொல்வாய் : “நான் அறிவேன். அதனில் நான் மட்டு மில்லை. மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன் பற்றி யுள்ளன என்னை ?” நான் உரைத்தேன் : உனது பிரதி பலிப்புகள் அவை எல்லாம் ! ஒருவரை ஒருவர் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)

This entry is part 31 of 42 in the series 22 மே 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒடிக் கொள்வார்.  நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன புலாலாகத் தொல்லை கொடுக்கும்.” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++இசை ஆத்மாவின் நாதம்+++++++++++ என்னிதயம் கவர்ந்த வனிதை அருகே அமர்ந்து […]

கை விடப்பட்ட திசைகள்..

This entry is part 30 of 42 in the series 22 மே 2011

* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்.. ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம். தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து நீந்திப் பழகிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து கூரைக்கு மேலே பறத்தலை நிகழ்த்துகின்றன.. ரகசியமென இரவுகளில் கவிழ்கின்றது முன்னெப்போதும் இளமையென கை  விடப்பட்ட சந்தர்ப்பங்கள்.. ***** –இளங்கோ

இவைகள் !

This entry is part 29 of 42 in the series 22 மே 2011

ஒரு பறவையின் நீலச் சிறகு … இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் உன் பார்வை … அன்னியமாக உருக்காட்டி மறையும் என்னுருவம் … தொலைந்த பயணத்தின் தொடக்க நாட்கள் … கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில் சலனப்படும் மணம்.. நமக்கு நாமே எழுதிக்கொண்ட ஓர் இரவு ….. பூட்டிய வீட்டின் முன் விட்டெறிந்த கடிதம் … மற்றும் என் வருகைக்காக காத்து பதுங்கி முகம் புதைத்திருக்கும் கருப்பு நிற நாய்… இவைகள் ., இவைகள் மட்டும்தான் இன்று எனக்கு சொந்தமானவை ….! […]

நம்பிக்கை

This entry is part 28 of 42 in the series 22 மே 2011

பெரும்பாறையை யானையாய் ஆக்கியவனுக்கு எவ்வளவு நம்பிக்கையிருந்தால் கால்களில் பிணைத்திருப்பான் சங்கிலியை?!   –          இலெ.அ. விஜயபாரதி  

நட்பு

This entry is part 27 of 42 in the series 22 மே 2011

“கண்டிப்பா வந்துடறேன்…எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே… வெச்சுடறேன்”   “என்ன திவ்யா… யார் போன்ல?” என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த்   “என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா… அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்… அதுக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காளாம்… என்னையெல்லாம் இன்வைட் பண்ண வேண்டியதே இல்ல வந்துடறேன்னு சொல்லிட்டு இருந்தேன்” என உற்சாகமாய் பேசிய திவ்யாவை யோசனையாய் பார்த்தான் ஆனந்த்   அவன் பார்வையை புரிந்து கொண்டவள் […]

மூலக்கூறுக் கோளாறுகள்..:_

This entry is part 26 of 42 in the series 22 மே 2011

ஒன்றறியாமலே ஒன்றின் கால் ஒன்றறியும்.. எண்டோசல்பான் கலந்த கார்பன் ஹைட்ரஜன் மூலக்கூறுக் கோளாறில் விசையுற்றுப் பறக்கும் ஃபோட்டான்கள் மிதக்க உள்நுழைந்த கார்னியா கிரணம் பீடிக்க எண்டார்ஃபின்கள் தடை பிறழ்ந்த உற்பத்தி.. டெசிபல்களும் பிக்சல்களும் மாயக்கண்ணாடிப் பிம்பம் விளைத்த க்ளோனிங்குகள்.. சடை விழுது பின்னிய சாரையும் சர்ப்பமும்.. காலற்ற பைசாசங்கள் சுற்றிய நஞ்சுக் கொடி..

யார்

This entry is part 25 of 42 in the series 22 மே 2011

நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரி்க்குத் தான் தெரியும் பசியின் விஸ்வரூபம் குறளி வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுத்து நிற்பார்கள் இரத்தம் கக்குவதற்குப் பயந்து சில அப்பாவிகள் வன்முறையை எதிர்க்கும் திரைப்படத்தில் அரிவாள் தான் கதாநாயகன் பறவைகளின் எச்சத்தில் தான் அந்தக் காடுகளில் விருட்சங்கள் முளைத்தன உடலில் நிழல் போலல்லாமல் மனதின் நிழல் மண்ணில் விழுந்தால் நீங்கள் என்ன விலங்கென்ற புதிர் அவிழ்ந்துவிடும். […]

பிரதிபிம்ப பயணங்கள்..

This entry is part 24 of 42 in the series 22 மே 2011

விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் என்னை விலக்கி அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. . அவன் யார்? என்னைக் காணும் வேளைகளில் அவனுள் பிறக்கும் குறுநகைப்பிற்கான தகிக்கும் அர்த்தங்கள் யாது? எனக்கும் அவனுக்குமான இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள் உரைப்பது உண்மையில் என்ன? அவன் என்னைத் தீண்டுகையில் பிரதிகள் இடம்மாற்றப்படுவதை இதழ்களும் செவிகளும் உணர மறுக்கும் தருணங்கள் ஏன்? . இவ்வாறான எனக்காய் உதிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவனிடம் இருப்பில் இருப்பது வெளிப்படையான மௌனம் மட்டுமே.. அவன் மௌனத்தின் உச்சரிப்பினில் சகலமும் லயித்திருக்க… அவனுக்கான சிறகுகள் எனக்கும் எனக்கான எண்ணங்கள் அவனுக்கும் இடம் மாறியிருந்ததன… தற்சமயம் மௌன சிறகுகளுடன் […]

ஒரு பூ ஒரு வரம்

This entry is part 23 of 42 in the series 22 மே 2011

ஒரு பூ சோலையை கொண்டாடியது. அது மலர்ந்தும் மலராத தருணங்களில் மண் வயசுக்கு வந்தது . அந்தப் பூ ஊசித் தட்டான் ,வண்ணத்து பூச் சிகளை அருகழைத்து முகவரி சொல்லிக் கொண்டிருந்தது . யாரும் விலாசம் மறந்து விட லாகாது ….. மறக்காமல் வாசனையையும் பரிசளித்தது , கொஞ்சம் தேனையும். இதழ்களின் நுனியில் பனித்துளி பரவசமானபோது சூரியன் தாகம் தனித்து கொண்டான் அடர்ந்த வெறுமைகளில் அலைக் கழிந்த பேருக்கு அன்னமாக ….இனிக்கும் கனியாக அவதானிக்க இருந்தது . […]