நீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்

கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.…

வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்

தங்கப்பா (அணிந்துரை)   பாச்சுடர் வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ என்னும் இச்சிறு நூல் அழகிய இயற்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாகத் திகழ்கின்றது.   திருப்பாவை, திருவெம்பாவை எனும் நூல்களை நாம் அறிவோம். அவை சமயஞ் சார்ந்தவை. பிற்காலத்தில் அவற்றை அடியொற்றி இன்னுஞ் சில…

கிருதுமால்

ஹரி ராஜா                                     மழை என்றால் சாதாரண மழை இல்லை. பேய் மழை. மதுரை அப்போதிலிருந்தே வெப்ப பூமி தான். கோடையின் மாலைகளில் வரும் மழைக்காக ஏங்கித் தவிப்பார்கள் மதுரைவாசிகள். பெருமழை ஓய்ந்து சிறு தூரலாக மாற்றம் கொண்டிருந்த மாலை நேரம்.…

தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.

          சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக்  கட்டிடக்கலைப்  பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர்.           நுழை வாயிலினுள் நுழைந்ததும் வலது பக்கத்தில்…

நறுமுகையும் முத்தரசியும்

கோ. மன்றவாணன்   “ஏய் முத்துலட்சுமி... இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?” “பாக்கலம்மா...” “என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா... நீ பாக்கமாட்டீயா?” “இல்லம்மா...” “என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு” “ஒடம்பு முடியலம்மா…