நீலகண்டன்
எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொரு இருப்பிற்கான வெறுப்பினை வைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது.
வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும் இந்துயிசமும்,அதன் அப்பட்டமான உட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ரசூலின் கவிதைகள் மற்றமைகளுக்கான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் இன்னுமொரு புதிய அனுபவத்தை தரத் தயாராய் இருக்கின்றன.
தன்னிலிருந்து மற்றமையாக உயிர்த்தெழும் பெண்களின் சன்னமான,அதிநுட்பமான நினைவொலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கக் கூடியவை ரசூலின் கவிதைகள்.
குமரிமாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ரசூல் தனது கவிதைகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் தான் சார்ந்த சமய அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்குள்ளானவர்.அதேசமயம் தமிழ் முஸ்லீம்களிடமும் நவீன கவிதைப் பரப்பிலும் பெருங்கவனத்திற்குள்ளானவர்.
சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட அவரின் மைலாஞ்சி கவிதைதொகுப்பிற்குப் பின் நீண்ட இடைவெளியில் இத்தொகுப்பு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
உயிர் எழுத்து ,தாமரை இதழ்களிலும்,திண்ணை,கீற்று,வார்ப்பு மின்னிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் ரசூல் ஜனகணமன,என் சிறகுகள் வான்வெளியில்,பூட்டிய அறை,உள்ளிட்ட நான்கு கவிதை தொகுதிகளையும் புதுக் கவிதையில் நவீனப்போக்குகள்,இஸ்லாமியப் பெண்ணியம்,அரபுமார்க்சியம்,குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்,பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள்,கெண்டைமீன்குஞ்சும் குரான்தேவதையும், தலித்முஸ்லிம் ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
கவிமனங்களுக்குள்ளும்,அரசியல் மனங்களுக்குள்ளும் நீண்ட விவாதங்களை எழுப்பும் ஆற்றல்களை கொண்டுள்ள இக்கவிதைகளை தொகுப்பாய் வெளியிட வாய்ப்பை நல்கிய தோழர் ரசூலுக்கும்,நூலின் உள்கட்டமைப்பை அழகாய் வடிவமைத்த ஜீவமணிக்கும், முகப்பை நேர்த்தியாய் செய்த விஜயனுக்கும்,அமுதா, ஷோபா,மதிவண்ணன்,விஜயானந்த்(பெங்களூரு)தமயந்தி-பானுபாரதி, புனிதபாண்டியன் உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றியினைச் செலுத்துகிறோம்.
தோழமையுடன்
நீலகண்டன்
(பதிப்புரையில்)
நூல் விவரங்கள்:
கவிதை நூல்: உம்மா:கருவண்டாய் பறந்து போகிறாள்
ஆசிரியர்: ஹெச்.ஜி.ரசூல்
பக்கங்கள்:142
விலை: ரூ 90/
வெளியீடு
கருப்புபிரதிகள்
பி55 பப்பு மஸ்தான் தர்கா
லாயிட்ஸ் சாலை
சென்னை – 600005
பேச: 9444272500
மின்னஞ்சல்:karuppupradhigal@gmail.com
- கலங்கரை
 - பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்
 - கௌமாரிமுத்துவின் ‘ தேனி மாவட்டம் ‘
 - அ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி
 - நான் வெளியேறுகையில்…
 - சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ
 - சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘
 - ஆவின அடிமைகள்
 - பழமொழிகளில் பழியும் பாவமும்
 - விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு
 - நானும் நாகேஷ¤ம்
 - ஜென் ஒரு புரிதல்- பகுதி 29
 - நாய்ப்பிழைப்பு
 - மகள்
 - பிரியாவிடை
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)
 - இரகசியக்காரன்…
 - பாரதி இணையதளத்தில்
 - சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”
 - பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா
 - திருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு
 - ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1
 - “எழுத்தாளர் விபரத் திரட்டு”
 - மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11
 - காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை
 - அப்பாவின் நினைவு தினம்
 - பள்ளி மணியோசை
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)
 - இப்படியும்… பேசலாம்…..!
 - முன்னணியின் பின்னணிகள் – 24
 - எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
 - எல்லாம் தெரிந்தவர்கள்
 - ஐம்புலன் அடக்கம்
 - உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8
 - போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை
 - ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சி
 - பஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி
 - என் மனைவியின் தாய்க்கு
 - சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53
 - ஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை
 - கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7