ஆர் வத்ஸலா மல்லாந்து படுத்து கருநீல வானின் வைரங்களை விடிய விடிய எண்ண ஆசைப்படும் வரை ஒவ்வொரு பூனையின் ஒவ்வொரு முகபாவமும் வெவ்வேறாகத் தோன்றும் வரை முன்பின் தெரியாத கைக்குழந்தை என்னை பார்த்து களுக்கென சிரிக்கும் வரை மரத்தில் இருந்து உதிர்ந்த மலரின் அழகை காணத் தெரிந்த வரை ஜன்னல் வழியே பறவைகளையும் பறக்கும் விமானத்தையும் கண்டு அதிசயக்கும் வரை இருக்கிறது தகுதி எனக்கு வாழ
ஆர் வத்ஸலா வேண்டியவர்களுக்கு கணினியில் மின்னஞ்சல் செய்து கொண்டு அறித்திறன் பேசியில் மற்றதை தன்னை புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்துக் கொண்டு புலனக் குழுக்களில் உள்ளூர் வெளியூர் உறவுகளுடன் நண்பர்களுடன் குறுஞ்செய்திகளில் (முகம் பார்க்காமலும் பார்த்தும்) புலன அழைப்புகளில் நட்பும் விரோதமும் பாராட்டிக் கொண்டு தேவைப்படும் பொழுது காதில் குட்டிக் கருவிகள் அணிந்து மற்றவரை தொந்தரவு செய்யாமல் இணைத்திரை ரசித்துக் கொண்டு புது செயலி வரும் போதும் தெரிந்த செயலி புது அவதாரத்தில் தெரியாமல் போகும் போதும் பேரக் […]
ஆர் வத்ஸலா எனது உடலின் வயதும் காலி வயிற்றில் அதன் இனிப்பும் எண்பதும் இரு நூறும் என்பதாலும் பிள்ளைகள் பெரியவர்களாகி என்னைப் போலல்லாமல் பேரறிவுடன் இப்போதிருந்தே ‘டயட்’டில் என்பதாலும் பேத்தி ‘ஸ்விக்கி’ சரணம் என்பதாலும் பல ஆகாரங்கள் எங்கள் வீட்டில் ‘ஆதார்’ தொலைத்தன சுற்றுப்புற சூழல் மாசைக் கருதி பட்டாசுக்கு வீட்டில் தடை ‘கொலாஸ்ட்ரால்’ அச்சத்தில் காசி செல்லாமலேயே வடையை விட்டோம் தலைவலிக்கு பயந்து எண்ணெக்குளி ‘ஷாம்பு’ குளியாகி ‘கீசர்’ குழாயில் கங்கை கண்டோம் மற்றவர் புது […]
குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் […]
எஸ் ஜெயலஷ்மி 48. ஆலம் அமர் கண்டத்து அரன் ——-ஆலகால விஷத்தைத் தன் கழுத்திலே கொண்ட சிவன் தேவர்களும் அசுரர்களும் கூடி திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப் பட்டது. அதன் வெம்மையைத் தாங்க முடியாமல் தேவர்கள் முறையிட்டபோது சிவன் அந்த விஷத்தை விழுங்கினார்.இதைக் கண்ட உமாதேவியார் தடுக்க அவ்விஷம் சிவனின் கழுத்திலேயே தங்கி விட்டது. சிவன் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார். ஆலம் அமர் கண்டத்து அரன், ஆலமர […]
ஆர் வத்ஸலா சிறு வயதில் மும்பை திரையங்கில் அப்பா அம்மாவுடன் 10 மணி காட்சியில் ‘ஜெமினி’யின் ‘ஏ.வி.எம்.’ மின் தமிழ் படம் பார்க்கையில் இடைவேளையில் வெவ்வேறு அழகான நிறங்களில் கண்ணாடி தம்ளர்களில் விற்கப்பட்ட திரவங்களின் (கற்பித்துக் கொண்ட) ருசி நாற்பது வயதில் முதன்முதலாக வீட்டில் கலர் படம் பார்க்கையில் நானே செய்த மாம்பழ மில்க் ஷேக்கில் காணவேயில்லை தெருவோர சாக்கடைக்கு மிக அருகில் இயங்கும் தள்ளுவண்டி ‘பவனை’ தாண்டிப் போகையில் மூக்கைத் துளைக்கும் வாசனையுடைய வெங்காய பஜ்ஜி […]
ஆர் வத்ஸலா அம்மா போன பின் நான் எப்படி காபி கலந்தாலும் ‘ஒங்கம்மா போட்றா மாதிரி இல்லெ’ என்பார் என் அப்பா சாகும் வரை மாய்ந்து போனாள் அம்மா அப்பாவின் அம்மா போடும் காபி போல் அவளுக்குப் போடத் தெரியவில்லை என்று அப்பா தினமும் சொல்வதை சொல்லிச் சொல்லி
ஆர் வத்ஸலா வேகும் வெயில் முட்டை அவிக்கவும் அப்பளம் சுடவும் அதை தாராளமாக உபயோகிக்கலாம் தோன்றுகிறது நல்ல வேளையாக கணவர் மகன் மருமகள் மூவரும் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் வீட்டுக் கடனடைந்தவுடன் நான் விருப்ப ஓய்வு எடுத்தாகி விட்டது பேரக் குழந்தைகளை “வீடியோ கேம்”உடன் ஒரு அறையில் அமுக்கி விட்டேன் சமையல் வாயு தீர்ந்தவுடன் இன்னொன்றுக்கு பதிவு செய்துவிட்டேன் கடன்காரன் இன்னமும் வரவில்லை நேற்று மாலையில் நடைப்பயிற்சி செய்கையில் தெருக்களில் குப்பை கண்டேன் புகைப்படத்துடன் மாநகராட்சிக்கு புகார் செய்தேன் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ், 22 அக்டோபர். 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி : https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கப்பை – கதையை முன்வைத்து… – ரா.கிரிதரன் தொடர்கள் ஜகன்னாத பண்டித ராஜா -2 – மீனாக்ஷி பாலகணேஷ் அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6 – ரவி நடராஜன் ஜப்பானிய பழங்குறுநூறு 47-50 – கமலக்கண்ணன் கதைகள் சரண் நாங்களே – ஆர்.வி படையல் – நா.சிவநேசன் நினைவில் நின்றவை – கே.எஸ்.சுதாகர் குறுநாவல் / நாவல் சிவிங்கி – அத்தியாயம் இரண்டு – இரா.முருகன் மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு – இரா.முருகன் உபநதிகள் – பதினேழு – அமர்நாத் அதிரியன் நினைவுகள் – 24 – தமிழில்: நா.கிருஷ்ணா கவிதைகள் நாஞ்சில் நாடன் கவிதைகள் மொழியும் மண்ணும் – தமிழில் […]
கோ. மன்றவாணன் ஒவ்வொரு கதையும் நம்மைத் தூங்க விடாது. (சி. ஞானபாரதியின் “சந்திரமுகி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) —கோ. மன்றவாணன்— “ஒவ்வொரு புத்தகமும் ஒரு முள்ளம் பன்றி; மூளைக்குள் போனதும் சிலிர்த்துக் கொண்டுவிடும்” என்ற கார்க்கியின் வரியில் இருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகத்தின் முன்னுரை. சி. ஞானபாரதி எழுதி உள்ள சந்திரமுகி சிறுகதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்க யாருடைய மூளையும் சிலிர்த்துக் கொள்ளும். இதை இலக்கிய சாட்சிப் பெட்டியில் ஏறி உரக்கச் சொல்லுவேன். இருபது, நாற்பது, ஐம்பது […]