என் விழி மூலம் நீ நோக்கு !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா

 

++++++++++++++

 

என் விழி மூலம் நீ பார்க்க முயல்;

வாய் களைத்து போகும் வரை

நான் பேச வேண்டுமா ?

உன் விழி மூலம் பார்த்தால்,

சீக்கிரம்

நம் காதல் முறிந்து போகும்

வாய்ப்புள்ளது !

நாமிருவரும் தீர்த்துக் கொள்ளலாம்,

தீர்வு காண முடியும் நாம்.

சிந்தித்துப் பார்

நீ என்ன சொல்கிறாய் என்று.

நம் வாழ்நாள் மிகவும் குறைவு !

நாம் புகார் செய்யவோ,

தகராறு புரியவோ,

சண்டை செய்யவோ

நமக்கு ஏது நேரம் ?

அவை யாவும் பெரும் தவறாய்த்

தெரியு தெனக்கு ! 

 

மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்:

என் விழி மூலம் நோக்கு !

உன் விழி மூலம் பார்த்தால்

உறவு அறுந்து போகும்

சீக்கிரம் !

யார் சொல்வது சரி ?

நீயா ? நானா ?

காலமே உனக்கறி விக்கும்

ஒருநாள்.

+++++++++++

jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *