கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)

This entry is part 20 of 48 in the series 11 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“கடவுள் உனக்குக் கொடையாக அளித்துள்ளார் ஆன்மீக இறக்கைகளை ! அவற்றின் மூலம் நீ காதல் விரி வான்வெளிக் கோட்டையில் விடுதலையாகப் பறக்கலாம். நீ உன் கையாலே உன் இறக்கைகளை வெட்டி, உன் ஆத்மாவை நசுக்கி மண்ணில் நெளியும் புழுவாய் நகர்வது வருந்தத் தக்க நிகழ்ச்சி இல்லையா ?”
கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)
+++++++++++

அறிவும். பகுத்தாய்வு நெறியும்

அறிவுக் கல்வி இல்லாது
வெறுமை யாய்ப்
பகுத்தாய்வு மட்டும்
பெறுவது
உழாத நிலத்தை
ஓத்தது !
சத்துண விழந்த
சடலம் போன்றது !

பகுத்தாய்வு சந்தையில்
விலைக்கு
விற்கப் படும் ஒரு
கடைப் பொருளன்று !
மென்மேலும்
மிகுத்துக் குவியும் சரக்குகள்
தகுதித்தனம் இழக்கும் !
கறைப் படும்
பெருக்க நிலையில் !
கடையில் விற்கப் படின்
ஞானிகள் மட்டும்
மெய்யான
மேன்மை அறிவார் !

மூடன் மடமை தவிர வேறு
தேடு வதில்லை !
பித்தனை ஈர்ப்பவை
பித்து நடப்புகள் !
“நம்மோ டிருப்பவர்
எத்தனை பித்த ரென்று
எண்ணிச் சொல்
என்றேன்”
நானோர் மூடனிடம் !
நகைத்துக் கொண்டு சொல்வான்
“கடினம் அது ! எண்ணிடக்
காலம் பிடிக்கும் !
அதை விட்டு
மேதைகளை எண்ணுவது
ஞான மல்லவா ?”

(தொடரும்)
+++++++++++++
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 7, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)எவரும் அறியாமல் விடியும் உலகம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *