காமம்

This entry is part 24 of 31 in the series 5 பிப்ரவரி 2012

எப்பொழுதாவது என்னில் உறைந்த சில பொழுதுகளை

பாசியென அடர்ந்திருகி விட்ட சில நியாபகங்களை

சாத்தானாய் மெல்ல என் உடல் பற்றி வெளியேற

அவள் தம் பிழிகளின் வியே தூபம் காட்டிக் கொண்டிருப்பாள்

நிசி நேர ஓர் புகை மூட்ட கனவைப் போன்றும்

கனவுத் தூதுவனொருவனின் பாஷையறியா

காதோர சில முனுமுனுப்புகளைப் போன்றும்

தன் அங்க அசைவுகள் வழியே விளங்காதொரு

பிம்பங்களற்ற மாய தோற்றங்களை இலகுவாய்

என் சுற்றிக் கட்டி முடித்திருப்பாள்

காமம் பெருகி

கனவுகளில் வடிந்த வியர்வையில் குளித்து

விரசம் கிளர்ந்து திமிறி நிற்கையில்

சட்டென மாயைகள் அறுத்து

காற்றினில் கரைந்திட்ட மாய தோற்றங்கள் வழியே

தன்னையும் ஒளித்து விட்டிருப்பாள்

பின்னரும் ஏற்றதொரு நிராசையில்

கனவுகள் காய்ந்து விரசம் சூம்பிக் கிடக்கும் ஓர் வேளை

இனியொருதரம் ஏதுமற்று முன்னே களைந்த பொழுதுகளை

மீண்டும் அவள் தம் விழி வழியே

தூபம் காட்ட விழைவாள் இன்னொரு முறையும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9கவிதை கொண்டு வரும் நண்பன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *