காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு – 21.3.2016 முதல் 23.3.2016 வரை

author
0 minutes, 11 seconds Read
This entry is part 11 of 12 in the series 13 மார்ச் 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்  வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது. 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி) உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு

காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)
21.3.2016 திங்கட்கிழமை   மாலை 5.00 மணி           திருவிழா மங்கலம் 

தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர்

திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்

இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,

மலர் வணக்கம்  – திருமதி ராதா ஜானகிராமன்

கம்பன் அடிப்பொடி அஞ்சலி – செல்வி எம். கவிதா

கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்

கல்லூரி மாணவ மாணவியர்

வரவேற்புரை- திரு கம்பன் அடிசூடி

தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்

இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு –

மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்

பொன்விழா கொண்டாடிய புதுச் சேரி கம்பன் கழகத்தின் செயலாளர் திரு. வி.பி சிவக்கொழுந்து அவர்களுக்கு கம்ப வள்ளல் விருதி வழங்கிப் பாராட்டு

மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன்

கோவை கம்பன் கழகத் துணைச் செயலாளர் பேராசிரியர் க. முருகேசன் எழுதிய  தெய்வமும் மகனும் நூல் வெளியீடு  –

பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கரைக்குடியில்  ஜீவா என்ற நூல் வெளியீடு

சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு. த. இராமலிங்கம்

அந்தமான் தீவில் கம்பன் கழகம் 2016 ஏப்ரலில் கூட்டும் மூன்றாம் உலகத் தமிழ்க்கருத்தரங்கச் செய்தி விழா மடல் வெளியீடு  – செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர், நமது செட்டிநாடு இதழ் புரவலர் திரு இராஜாமணி முத்துக்கணேசன்


கோவிலூர் ஆதீன கர்த்தர் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் கல்விப் பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் இவ்வாண்டு நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கிப் பாராட்டு – மனிதத் தேனீ  இரா. சொக்கலிங்கம் 


மாணக்கர்களுக்கான பரிசளிப்பு- திருமதி வள்ளி முத்தையா


தலைமை உரை- திரு. உ. சகாயம் இ. ஆ. ப. அவர்கள் 


————————————————————————————————————————



22.3.2016 செவ்வாய்க் கிழமை   மாலை 5.00 மணி           பூர நாள் நிகழ்ச்சி

தமிழமுதம் – செல்வி எம். கவிதா (தக்க பின்னியங்களுடன் )
                                                            கருத்துப்பொழிவு                                                              



கம்பனில் மறக்க முடியாதது – திரு. த. இராமலிங்கம்

கம்பனில் மறக்கக் கூடாதது –திரு. பழ. கருப்பையா



                                                                     கவிப்பொழிவு                                                           


                                        பொருள் – தமிழ் வெள்ளம்


தொடக்கப்பொழிவு – நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு  கனிமொழி

சொற்கடல் – கவிதாயினி திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்

சுவை ஊற்று – கவிதாயினி திருமதி சல்மா


————————————————————————————————————————



23.3.2016 புதன் கிழமை   மாலை 5.00 மணி           உத்தரநாள்

தமிழமுதம்- செல்வி எம். கவிதா


                                               பட்டிமண்டபம்


நடுவர்- திரு தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன். 


                தலைப்பு – எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு

                                       வெளிப்படுகின்றார்?


இராமன் -கைகேயி-                திரு. வே. சங்கர நாராயணன்

                                                           திருமதி பாரதி பாபு 

                                                            திரு பாகை கண்ணதாசன்


இராமன் – இராவணன்            திரு இரா. மாது

                                                              திரு. சுமதிஸ்ரீ

                                                               திரு. மெ. ஜெயம்கொண்டான்

இராமன்- சிறைமீண்ட சீதை  திரு. பழ. முத்தப்பன்

                                                                திருமதி இரா. கீதா

                                                                திரு அப்பச்சி எஸ் சபாபதி



நோக்கர் பெருமகள்ள நாற்பத்து ஒன்பதின்மர் வாக்களித்து ஒரு அணியை விலக்குதல்


நோக்கர்கள் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு

நோக்கர்கள் சார்பில் எதிர் வாதம் – திரு. மா. சிதம்பரம்

நடுவர் தீர்ப்பு

  24.3.2016 வியாழக்கிழமை  மாலை 5.00 மணி          நாட்டரசன் கோட்டை

தலைவர்  

நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு டாக்டர் ஈ. எம். சுதர்சன் நாச்சியப்பன்


கம்பன் அருட்கோயில் வழிபாடு


மலர் வணக்கம்   திருமதி லெட்சமி கிருஷ்ணமூர்த்தி

                                        திருமதி ராதா ஜானகிராமன்


கம்பன் அருட்கவி ஐந்து – திருச்சி கலைக்காவிரிக் குழுவினர்


இறைவணக்கம் – செல்வி எம்.கவிதா


வரவேற்புரை – திரு. கண. சுந்தர் 


தலைவர் உரை


கம்பன் கலை நகைச்சுவை  – முனைவர் இளசை சுந்தரம்


நன்றியுரை – முனைவர் மு.பழனியப்பன்


வாழிய செந்தமிழ்  


அனைவரும் வருக.   அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருக. 


———————————————————-


இவ்வாண்டு நிகழ்ச்சி உதவி


நமது செட்டிநாடு – இதழ்

கோட்டையூர் வள்ளல் அழகப்பர் குடும்ப திருமதி வள்ளி முத்தையா

பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்

திரு.அரு. வே. மாணிக்கவேலு, சரஸ்வதி அறக்கட்டளை

நாட்டரசன் கோட்டை திருமதி விசாலாட்சி கண்ணப்பன்

சிங்கப்பூர் தமிழ் அன்பர்

காரைக்குடி தெ. இலக்குவன் நினைவாக இல தெய்வராயன் காந்தி

திரு. கண. சரவணன், ஸ்ரீலெட்சுமி பிரிண்டர்ஸ், காரைக்குடி

விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை மதுரை

 ஸ்ரீ விசாலம் சிட் பண்டு


மாணக்கர்களுக்கான பரிசு

பேராசிரியர் தி. இராச கோபலன் நிறுவியுள்ள வேம்பு அம்மாள் பரிசு

பேராசிரியர் சரசுவதி இராமநாதன் நிறுவியுள்ள புலவர் க.வே. இராமநாதனார் பரிசு

பேராசிரியர் மு.பழனியப்பன் நிறுவியுள்ள பழ. முத்தப்பனார் பரிசு

பொன்னமராவதி அரு,வெ . மாணிக்கவேலு சரசுவதி பரிசு

திருமதி லெ. அலமேலு நிறுவியுள்ள அரியக்குடி ஆர். எம். வெங்கடாசலம் பரிசு 

Series Navigationசொற்களின் புத்தன்தி டோக்கன் ஆங்கிலம் – மே சிங்க்ளேர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *