நான் நெருங்கிப்போகிறேன்
அவர்கள்
என்னை மதிப்பதில்லை
என்னை நெருங்கியவர்களை
நான்
நினைப்பதேயில்லை …..
வலியின் அலைகற்றை
சுமந்து வந்த என் குரலை
சலனமில்லாமல்
வீசி எறிகிறார்கள் அவர்கள் .
அவர்களை பின்தொடர்கிறேன் ..
காயங்களை விசிறிவிட
என்னை பின்தொடர்கிறவர்களை
பொருட்படுத்தாமல்….
என்னிடம்
ஏங்கி தவிப்பவர்களுக்கு
ஏமாற்றத்தை அளித்தபடி ,
யாரோ சிலரின்
தாழிடப்பட்ட கதவுகளின்
வெளியமர்ந்து யாசிக்கிறேன் ,
பிச்சையாய் பெற அவர்களிடம்
ஏதுமில்லை என தெரிந்திருந்தும் …
நிரம்ப தளும்பும்
என் அன்பின் கோப்பையை
போட்டுடைக்கிறார்கள் சிலர் ,
சில்லுகளை பொறுக்கியபடி
மீண்டும் ஒரு கோப்பையை நீட்டுகிறேன் ,
எனக்கு நீட்டப்படும்
கோப்பையை நிராகரித்தபடி …
இப்படி இப்படியாக
சமனில்லாத வாழ்க்கை
தள்ளாடி பயணிக்கிறது
ஒரு மலை உச்சியை நோக்கி …..
–க.உதயகுமார்
- தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு
- இதற்கும் அப்பால்
- இரண்டு கூட்டங்கள்
- சமனில்லாத வாழ்க்கை
- கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்
- நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்
- பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்
- ஜென் ஒரு புரிதல் 11
- அகஒட்டு( நாவல்)விமர்சனம்
- அடைமழை!
- தேடல்
- ஒரு கடலோடியின் வாழ்வு
- காலம் கடந்தவை
- எனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)
- தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.
- பிரபஞ்ச ரகசியம்
- இதுவும் ஒரு சாபம்
- வாசிக்கஇயலாதவர்களுக்கு
- தெய்வத்திருமகள்
- பேசித்தீர்த்தல்
- நகரத்து மாங்காய்..
- அதுவும் அவையும்!
- காரணமில்லா கடிவாளங்கள்
- நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.
- கனவுகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு !(கட்டுரை : 74)
- சங்கமம்
- நிலா விசாரணை
- இரை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)
- தமிழ் வளர்த்த செம்மலர்
- உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி
- பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….
- பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்
- முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8
வலிக்க வலிக்க ஓர் உண்மையைச் சொல்லும் கவிதை.
தேடுதல் என்பது வாழ்வில் ஒர் அங்கம்தான்.
**தள்ளாடி பயணிக்கிறது
ஒரு மலை உச்சியை நோக்கி**
எனக்கென்னமோ மலை உச்சி எப்போதும் எட்டாக்கனிதான்.
”கிட்டாதாயின் வெட்டென மற” க்கத்தெரியும் வரை சமனில்லா வாழ்வுதான்.
என் செல்பேசி அழைக்கும் நண்பனின் குரலை வெறித்தபடி, என் செய்திப்பெட்டியில் திறக்காமல் இருக்கும் பெயரை இமைக்காமல் பார்த்தபடி இருக்கும் நாட்களில் திடுமென ஒரு கணம் சூனியமாகிவிடும் வாழ்வு. அன்று மாலையே தலைகீழாக யாருக்கோ விடாமல் போன் செய்வதும், செய்தி அனுப்புவதுமாக அகன்ற பாலைவனத்தின் நடுவில் நின்றிருப்பேன்.
விரும்புவரை உதாசீனம் செய்வதும், விடாமல் எதையோ துரத்துவதும் ..ச்சே என்ன வாழ்க்கைதான் இது..
**எனக்கு நீட்டப்படும்
கோப்பையை நிராகரித்தபடி ** கவிதையை சிலாகிக்க முடியாமல் கனத்துப்போகிறது மனது.
யதார்த்தமே ஒரு கவிதையாய்..