தெற்குச் சீமையின்
வற்றிப் போன மாரை
சப்பிச் சுவைத்து கடித்து
சுரக்கும் எச்சிலில்
பசியைத் தணித்துக்
கொண்ட வரலாற்றை
முதுகில் சுமந்து
கொண்டு அகதியாய்
புலம் பெயர்ந்த நகரமிது.
கால்கடுக்க நின்று
பட்டன் தைக்கும்
பணியாளாக-நிறைமாத
கர்ப்பிணி மனைவியை
அனுப்பி வைத்தும்
வயதிற்கு வந்தத்
தங்கையைக் கம்பெனி
வேனில் ஏற்றி விட்டு
போனவள் போனவளாகத்
திரும்ப வேண்டுமெனும்
வயிற்று நெருப்பை
அணைக்க வழியில்லாதும்
சாவை பார்த்துக் கிடக்கும்
சீக்காளி அம்மாவிற்கு
மருந்து வாங்கக்
காசில்லாதும் வாழ
வந்த வக்கத்தவன்.
நாளத்தின் குருதியை
கத்தரிக்கோல் தையல்
எந்திர ஊசி வழி
துணிக்குள் செலுத்தும்
வேதனையைச் சுமந்து
சேர்த்த காசுகளில்
இன்னும் வாங்கிய கடனின்
வட்டியே குறைந்தபாடில்லை.
தன்மார்புக் காம்பை நீட்டி
அனைவருக்கும் பால்
சுரந்து வயிறு குளிர்வித்து
கோமாதாவாகக் காட்சியளித்த
நகரத்தாயின் காம்புகளில்
நஞ்சு சுரப்பதாய் இன்று
துரத்தப்படுகிறேன்.
உள்ளூர்க்கடன்
தங்கைத்திருமணம்
சொந்தவீடு
உழைப்புக்கேற்றகூலி
கையில்நாலு காசு
எனக் கட்டி வைத்த
மனக் கோட்டைகளை
உடைத்தெறிந்து தாயகம்
திரும்பச் சொல்லி வந்த
மரணஓலையைச் சுமந்து
கொண்டு நிற்கிறேன்.
என் கிராமத்தில் நஞ்சைக்
கடனாய் பெற மிச்சப்பட்டவன்
என எவனுமில்லை.
இங்கு நஞ்சு பாய்ச்சி ஓடும்
சாக்கடை நீரில் ஒரு
குவளை அள்ளிப் பருக
அனுமதியுங்கள்-பசிஅமர்த்தி
என் தேசம் திரும்புகிறேன்
ஒரு சவமாக.
-சோமா
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
//கால்கடுக்க நின்று
பட்டன் தைக்கும்
பணியாளாக-நிறைமாத
கர்ப்பிணி மனைவியை
அனுப்பி வைத்தும்
வயதிற்கு வந்தத்
தங்கையைக் கம்பெனி
வேனில் ஏற்றி விட்டு
போனவள் போனவளாகத்
திரும்ப வேண்டுமெனும்
வயிற்று நெருப்பை
அணைக்க வழியில்லாதும்
சாவை பார்த்துக் கிடக்கும்
சீக்காளி அம்மாவிற்கு
மருந்து வாங்கக்
காசில்லாதும் வாழ
வந்த வக்கத்தவன்.
நாளத்தின் குருதியை
கத்தரிக்கோல் தையல்
எந்திர ஊசி வழி
துணிக்குள் செலுத்தும்
வேதனையைச் சுமந்து
சேர்த்த காசுகளில்
இன்னும் வாங்கிய கடனின்
வட்டியே குறைந்தபாடில்லை.//
அன்புள்ள சோமா அவர்களே
வறுமையின் அத்தியாயத்தில் இவ்வளவு நிறங்களா?உள்ளம் உருக்கும் வரிகள்.
“சாயப்பட்டறை”யா?சாவுப்பட்டறையா?வர்ணங்களுக்கு கூட இத்தனை கழிவுகள்
சாக்கடையாக ஓடிடுமா என்ன?இதுவே நம் “மூவர்ணச் சுதந்திரத்தின்” விசித்திரங்கள்.கவிதை மிக அருமை.
அன்புடன்
ருத்ரா
nice one… thanks to share…
The misfortune remains unchanged even in the asylum. It is no doubt a dy(e)ing unit. Soma has dyed craftily in the wool. Poem oozes pain and misery. On reading the heart aches Soma!
Thanks for your words Ruthraa…Rishvan …Ramani….now these people (labours) are working under “RGRDS” scheme and getting Rs.100 per day with out any work. The same amount will be collected by our “THE GREAT TASMAC” in evening. Anyhow they are drinking in free of cost to reduce their life span….