Posted in

ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி-2016 _ கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2016

This entry is part 15 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

 

ஆறாவது ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்களும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன.

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை, கட்டுரைகள் ஆகிய நான்கு பிரிவுகளில், 2015 ஆம் ஆண்டு (ஜனவரி 2015 முதல் திசம்பர் 2015 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். நூல்கள் அனுப்ப இயலாதவர்கள் பரிந்துரைகள் அனுப்பலாம்.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை

ரூ 10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-08-2016

*அனுப்ப வேண்டிய முகவரி: \\ சீராளன் ஜெயந்தன், எண்.1, ஒய் பிளாக், இராஜ் பவன், சென்னை-600022//

இவண்
தமிழ்மணவாளன்
ஒருங்கிணைப்பாளர்
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்குழு

செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை

Series Navigationகவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்காத்திருத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *