ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக
1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என் சிறு வயதிலேயே சம்மதமற்ற ஒன்றாக இருந்ததால் கதையைப் பட்டஞ்சூட்டு விழாவுடன் நிறுத்தினேன். ராஜாஜி அவர்களின் ஆங்கிலப் படைப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டது. ஒரு முனிவரின் படைப்பை மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லாததாலும், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட கதை பிடிக்காததால், அதைத்தான் நாம் சொல்லப்போவதில்லையே என்கிற சமாதானத்திலும், ராஜாஜியே வால்மிகியைத் தழுவி எழுதியிருக்கும் போது நான் செய்தால் என்ன என்கிற எண்ணத்தாலும் அதை அப்படியே படைக்க முற்பட்டேன்.
கணிப்பொறி வாங்கிய பிறகு அதனை மீண்டும் தட்டெழுதினேன். அதன் வெளியீட்டுக்கு இப்போதுதான் வேளை வந்துள்ளது. Cyberwit Net எனும் பதிப்பகம் அதை வெளியிட முன்வந்துள்ளது. விரைவில் அது வெளியாகிவவிடும்.
அன்புடன்
ஜோதிர்லதா கிரிஜா
- வார்த்தைகள்
- ரோல் மாடல் என்னுடைய பார்வையில்.:-
- எல்லா அப்பாக்களிலும் தெரியும் என் அப்பாவிற்காக !!!
- தினம் என் பயணங்கள் -21 தேர்விற்கான நான்காம் நாள் பயணம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அகில ஈர்ப்பு விசை அலைகள் இணைப் பிரபஞ்சங்கள் இருப்பைச் சுட்டிக் காட்டும்
- மல்லாங்கிணறு தந்த தமிழச்சி தங்கபாண்டியனும் கவிதையும்
- தொடுவானம் 20. மனதில் உண்டான வலி
- நிலை மயக்கம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 79 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பெரு நகர மக்களின் வாழ்வியல் நிஜந்தனின் ” பேரலை “ நாவலை முன் வைத்து….
- நீள் வழியில்
- புதியதைத் தேடுகிறார் {வளவ.துரையனின் “ஒரு சிறு தூறல்” கவிதைத் தொகுப்பை முன் வைத்து}
- காவல்
- ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக
- முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்
- ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1
- திண்ணையின் இலக்கியத் தடம்-39
- நீங்காத நினைவுகள் – 50
- வாழ்க்கை ஒரு வானவில் 7.
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 8
- Lofty Heights event featuring well-known senior Carnatic vocalist from India, Raji Gopalakrishnan
புத்தக வருகையை எதிர்நோக்கியுள்ளேன். பாராட்டுகள் கிரிஜா.
சி. ஜெயபாரதன்