தாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. !

This entry is part 11 of 27 in the series 29 செப்டம்பர் 2013

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

மழை  கொட்டி முழக்கும்

இருட்டினில் நுழைந்து நானுன்

வாசற் படியில்

தயங்கி நிற்கிறேன்.

பயணியிடம்,

உன் ஓய்வுக் கோயிலின்

ஒரு புறத்தில்

ஒதுங்கிக் கொள்ள லாமா

என்று  கேட்கிறேன்.

உனக்கு நான்

வழிப் பாதையில் பறித்த

எழிலான  சிறுகிளை

மல்லிகை  மொட்டுகளைக்

கொண்டு வந்துள்ளேன்.

பின்னலில்  அதைச் சூடிக்கொள் .

மனத்தில் எழ இயலாமல்

கிடந்த

எனது நம்பிக்கை அது !

வார்த்தையில் எதுவும்

வடிக்காது

வந்த வழியில் திரும்புவேன்

மெதுவாய் !

விட்டில் கிறீச்சிடும் இரவு

வேளையில்

என் புல்லாங்குழல் இசைத்து

எனது முடிவுப் பாட்டை

உனது திசையில்

அனுப்பி வைப்பேன்  உனக்கு

எனது  இறுதிப் பரிசாக !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 107   1937  ஆண்டு மத்திமக் காலத்தில் தாகூர்  76 வயதினராய்  இருந்த போது எழுதப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  September  24 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபடிக்கலாம் வாங்க..மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *