தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !

This entry is part 21 of 26 in the series 27 அக்டோபர் 2013

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

image (2)
ஓயாமல் அடிக்கும்

இந்தச் சூறாவளிக் காற்றின்

திசை வழியே

பூச்செடி மொட்டுக்கள் யாவும்

துண்டிக்கப் பட்டன !

அவற்றை எல்லாம் சேகரித்துச்

சமர்ப்பித்தேன்,

உன் திருப் பாதங்களில் !

மென்மை யான உள்ளங் கைகளில்

அள்ளிக் கொள் அவற்றை !

ஆமாம் நீ

அள்ளிக் கொள் !

நான் சென்ற பிறகு,

அவை யாவும்

மலர்ந்து விரியும் உனது

மடியிலே !

இனிய சோகத்துடன்

மாலை பின்னிடும்

உனது விரல்கள்

என்னை நினைவிலே

வைத்துக் கொள்ளும் !

தூங்காத குயில் ஒன்று

வீணாய்

ஏங்கி அழுதிடும்,

உணர்ச்சி பொங்கும் இரவில் !

ஜோடிப் பறவை

நெருங்கி அந்தரங்க மாய்

முணுமுணுத்து

மோக இச்சையுடன் முயங்கும்,

கிருஷ்ணனின்

திருவிளை யாட்டுப் பௌர்ணமி

தினத்தில்,

பொன்னொளியில்

மிதந்து கொண்டு !

இந்தக் காட்சிக் குறிப்புகள்

அடுத்த நாள் ஆரத்திலும்

பின்னப் பட்டுக் கிடக்கும்,

களைப்புற்ற உனது

பிற்பகற் பொழுதும் !

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 223 1938 ஆண்டு மார்ச் 12 இல் தாகூர் 77 வயதினராய் இருந்த போது எழுதப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 22 , 2013

http://jayabarathan.wordpress.com/ss.com/

Series Navigationமருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *