பாரத நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாகிலும் இணையத்தின் வழியாக NEFT மூலம் புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் நூல்களையும் இதழ்களையும், சில முக்கிய ஆங்கில நூல்கள், இதழ்கலையுங்கூடச் சேமித்து வைத்து, ஆய்வாளர்களுக்குப் பேருதவி புரிந்து வரும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் மேலும் சிறப்பாகப் பயன்படும் பொருட்டு இணையத்தின் வழியாகவே NFET மூலம் நிதி உதவி வழங்க விரும்புவோர் பின்வரும் விவரங்களைக் குறித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்:
Account Holder: B. Krishnamoorthy
SB Account No. 1017047 Name of the Bank: UCO Bank Branch: PUDUKKOTTAI (Tamilnadu, India) IFS Code: UCBA0000112
இவ்வாறு செலுத்தியபின் அன்பு கூர்ந்து ஞானாலயாவுக்கும் தகவல் தெரிவியுங்கள்: அவர்களின் மின்னஞ்சல் முகவரி: gnanalayapdk@gmail.com
அஞ்சல் வழி அனுப்புவதாயின், B. கிருஷ்ணமூர்த்தி, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு என்ற முகவரியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
-மலர்மன்னன்
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
மே 07 ஞாயிறு காலை ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி என்னுடன் பேசினார். அதிகரித்துவரும் நூல்கள், புத்தகங்களைப் பாதுகாக்க ஞானாலயாவை விரிவு படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். நான் அங்கு சென்றிருந்த போதேகூடப் புதிதாக வரும் பல இதழ்களூம் நூல்களும் இடப்பற்றாக்குறை காரணமாக மாடிப் படிக்கட்டுகளிலும் அடுக்கி வைக்கப்படிருப்பதைக் கண்டேன். பாதுகாப்பாகத்தான்! இன்றைய நூல்களும் இதழ்களும்கூட நாளை தேடப் படவேண்டியவை தாம். ஆகவே அவற்றையும் முறையாகப் பாதுகாப்பது அவசியமே. வீட்டை விரிவு படுத்தி வாடகைக்குவிட்டுச் சம்பாதிக்கவே பலரும் விரும்பும் இந்நாளில் கிருஷ்ண மூர்த்தியும் டோரதி கிருஷ்ண மூர்த்தியும் இவ்வாறு தமது இடத்தைப் பொது நலன் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்குவது நம் அனைவரின் பாரட்டுக்கும் ஆதரவுக்கும் உரியது அல்லவா? ஞானாலயா ஓர் இலவச நூலகமே. அவர்கள் நுழைவுக் கட்டணம் ஏதும் விதிக்கவில்லை. உறுப்பினர் கட்டணமும் இல்லை. நுல்களையோ இதழ்களையோ பிரதி எடுத்துக்கொள்ள விரும்புவோரிடம் மட்டுமே அதற்குரிய கட்டணம் பெறுகிறார்கள். ஆகவே கூடிவரும் புத்தகங்கள், இதழ்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஞானாலயாவின் விரிவாக்கத்திற்கும் நாம் உடனடியாக நம்மாலியன்ற உதவியைச் செய்வோம். வீட்டில் சேர்ந்துவிட்ட நூல்கள்/இதழ்கள் இனித் தேவையில்லை எனவும் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதாகவும் கருதுவோர் அவற்றை ஞானாலயாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். தரமான நூல்கள்/இதழ்களை!
அன்புடன்,
மலர்மன்னன்