மணல் வீடு
வானக்கூரையை
தொட்டுக் கொண்டு
நிற்கும்
கலங்கரை விளக்கம்
படகுகளைத் தாலாட்டும்
கடலலைகள்
கடலில்
நீந்தும் மீன்கள்
வலையில் அகப்பட்டால்
பாத்திரத்தில் பதார்த்தமாய்
கிடக்கும்
கடலின் ஆழத்தில்
பனித்துளி முத்தாக
உருமாறும்
கடலலைகள்
எழுப்பும் ஓசை
ஆர்மோனியத்திலிருந்து
வெளிவரும்
சுதியைப் போலிருக்கும்
பால்யத்தில்
கிளிஞ்சல்கள் பொறுக்கிய
நாம் தான்
கடற்கரையிலும் கைபேசியில்
உரையாடுகிறோம்
கட்டிய மணல் வீட்டை
அடித்துச் சென்ற
கடலலையைப் பார்த்து
குதூகலித்தனர் குழந்தைகள்.
தூரத்துச் சந்திரன்
வீதியில் உறங்கியவன்
விழித்தெழுந்தான்
இருள் அவனை
அணைத்துக் கொண்டது
பிறந்தால்
ஆணா, பெண்ணா
என்று கேட்பார்கள்
இறந்தால் பாடியை
எப்ப எடுக்கறீங்க
என்று பரிதாபப்படுவார்கள்
நகர்ந்து கொண்டே
இருந்தால் தான்
அது நதி
தேங்கினால் அது குட்டை
குப்பைத் தொட்டியில்
வாழ்க்கையைத் தேடுபவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்
இரை தேடிச் சென்ற பறவை
கூட்டுக்குத் திரும்பாததால்
குஞ்சுகள் கத்திக் கொண்டிருக்கும்
நிலா தூரத்திலிருந்து
இதையெல்லாம் பார்ப்பதால்
தாய் பறவையைப் பற்றிய
சேதி சொல்லத் துடிக்கும்.
வார்த்தை
வார்த்தைகள்
எழும் முன்பே
கண்கள் பேசிவிடும்
எரியும் நெருப்பு
இரையாக்கப் பார்க்கும்
பறவையின் கூட்டை
முகப்பு விளக்கின்றி
வரும் வாகனம்
சாலையின் தடுப்புகளை
மோதி நிற்கும்
விலாசம் தவறாக
எழுதப்பட்ட கடிதம்
உரியவரிடம் சென்றுசேர
தவமிருக்கும்
தோற்றப் பொலிவைக்
காட்ட
ஒரு கண்ணாடி தேவையா
மின்விசறி சுழலாவிட்டால்
கொசுக்கள்
அக்குபஞ்சர் சிகிச்சையை
மேற்கொண்டிருக்கும்
வீதியின் பேரமைதியை
குலைக்கும்
ஊளையிடும் நாயின்
சத்தம்
தவறுதலாக மோதி்க்கொண்டோம்
ஸ்நேகமாக புன்னகைத்தான்
கோபத்தில் கொட்ட இருந்த
வார்த்தைகளை மென்று
விழுங்கினேன் நான்.
ப.மதியழகன்
- முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்
 - கதையல்ல வரலாறு (தொடர்) 1
 - சலனப் பாசியின் பசலை.
 - நிழல் வேர்கள்
 - நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
 - ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்
 - காற்றும் நானும்
 - ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..
 - சமன் விதி
 - புறமுகம்.
 - புழுக்கம்
 - நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.
 - (71) – நினைவுகளின் சுவட்டில்
 - சனி மூலையில் தான் நானும்
 - வினா ….
 - இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
 - எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)
 - மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக
 - பிறந்த மண்
 - காலம் – பொன்
 - ப.மதியழகன் கவிதைகள்
 - காட்சியும் தரிசனமும்
 - ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி
 - சின்னப்பயல் கவிதைகள்
 - காகித முரண்
 - அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்
 - விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்
 - மேலதிகாரிகள்
 - அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்
 - என்னைக் கைது செய்யப் போகிறார்கள்
 - கவிஞனின் மனைவி
 - வாழ்தலை மறந்த கதை
 - ஊதா நிற யானை
 - இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
 - “அறுபத்து நான்காவது நாயன்மார்“
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)
 - 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5
 - பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6
 - கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
 - ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்
 - திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்
 - இருள் குவியும் நிழல் முற்றம்
 - பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு
 - பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..