Posted in

மகா சந்திப்பொன்றில்

This entry is part 31 of 38 in the series 20 நவம்பர் 2011

மகா சந்திப்பொன்றில்
சுய பகிர்வு உள்ளடக்கிய
வாரத்தைகளை
தேடி கொண்டிருக்கையில்
ஊடுருவும் பார்வை
விடுவித்து கொள்ளும்
மவுனம்
கடந்து கொண்டிருக்கிறது .

உன் வெட்க
நிற பிரிகையில்
வண்ணங்களை
தூவி கொண்டிருக்கிறாய்
பொழிவின் ஒளி
பிரபஞ்சத்தை
மறைப்பதாக இருக்கிறது .
போதும் விட்டு விடு
உன் ஒவ்வொரு செய்கை
நம் நிறைவின்
தொடக்கமாகிறது .

நொடிகளை
இச்சமயம்
பழித்து கொண்டிருக்கிறது
நம் எண்ணங்கள் .
முடிவிலி காலம்
உண்டெனில்
அது இதுவாக
இருக்க கடவது .
அதில்
இப்பொழுது உன்
கற்பனைகளை
வைத்து ஒன்றும்
செய்ய இயலாது
என்னைத்தவிர .
அவ்வாறே நானும்
ஆக்கப்பட்டேன்
மகா சந்திப்பொன்றில் .
-வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரைந‌டுநிசிகோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *