மழையாகிவிட்ட தவளையின் சாகசம்

This entry is part 8 of 44 in the series 30 அக்டோபர் 2011

ஒரு முறைமையின் உதறலில்

எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும்

சதைக்கூளங்களை

எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த

கயமை குடி கொள்ளும்

நேசப் பறவைகளின் கூடுகளில்

பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி

பாசமாய் பாரம் சுமக்கும்

சுமைகளை தாங்கிய பாறை மனது

கெக்கலித்து புரளும் நினைவில்

ஊசலாடியபடி நெஞ்சக்கிடக்கை

விண்ணைத் தாண்ட எத்தனிக்கும்

மழைத் தவளையின் சாகசத்தோடு

துளியென்பது

கூழ் பூசின கூட்டின் அடையாளமாய்

வீலென்று அலறும்

கனத்த மார்பில் அமுது சுமந்தபடி

நிழல் பிடிக்க முடியாதவன்

சுரக்காத ஊற்றுக்காய் கண்ணி வைப்பான்

அவனே மழையாகிவிட்டவனாய்.

– சு.மு.அகமது

Series Navigationஇருள்அது
author

சு.மு.அகமது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *