அந்தக்குகை
அப்படியொன்றும்
இருட்டானதாக இல்லை
தொலைதூரத்திலிருந்து
பிடித்து வந்த
நட்சத்திரங்களை
கயிறுகளில் கட்டி
தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள்.
மின்மினி வெளிச்சத்தில்
குகையின் பிரமாண்டம்
பயமுறுத்தியது.
நடக்க நடக்க
நீண்டு கொண்டே போன குகையில்
வெளியை செல்ல வாசல்
எங்காவது இருக்கும்.
ஒருவேளை யாரும் திறக்காமல்
பூட்டியே இருப்பதால்
கதவுகளும் சுவர்களாய்
காட்சியளிக்கலாம்.
புறப்பட்ட இடத்திற்கே
வந்து விட்டதால்
பெருமூச்சு விடும் கால்கள்
இடறி விழுந்த வேகத்தில்
திறந்தது கதவு.
கண்ணைக்கூசும் வெளிச்சம்
கடலலை சப்தம்
காற்றாடி அறியாத
காற்றின் தரிசனம்
கையூன்றி எழுந்து நிற்பதற்குள்
நட்சத்திரங்கள்
பறந்து போயின.
குகை எங்கும்
இருள் கவிந்தது.
ஒற்றைக்கண் அரக்கன்
பக்கத்தில் வருகிறான்.
பைங்கிளி யாய்
அவன் தோள்களில் நான்.
சிறகுகளின்றி.
- நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24
- நீங்காத நினைவுகள் – 7
- தூக்கு
- செங்குருவி
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14
- மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)
- மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்
- ஒரு நாள், இன்னொரு நாள்
- மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.
- அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரை
- புகழ் பெற்ற ஏழைகள் – 11
- தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !
- யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா
- ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !
- அக்னிப்பிரவேசம்-38
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6
- நவீன அடிமைகள்
- மாய க்குகை
- தண்ணி மந்திரம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
கவிதையில் அவநம்பிக்கை தொனிக்கிறதே! மற்றபடி வாசிப்புக்குச் சுவையானதே.- நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.
சற்றுக் குழப்புகிறது. மாயக் குகை ஒரு மாயை என்று உணர்ந்து நிஜ உலகிற்கு வரும் கிளியை துரத்தும் அந்த ஒற்றைக்கண் அரக்கன் யார்? மாயக்குகையின் பீடாதிபதியா?
தூக்கம் எனும் ஆழ்கடலுள்
தின்று செறித்த
நனவு எலும்புகளின்
கூர்மை மிச்சங்கள்
நங்கூரம் பாய்ச்சியதில்
நீர்ப்பரப்புக்கு வந்த
நுரைக்குமிழி இது.
மனமே கடப்பாரை ஆகி
மனதுக்குள்
“தொட்டனைத்தே ஊறும்”
வானவிற்குழம்பு பீய்ச்சும்
அற்புத குகை இது.
ஒற்றைக்கண் அரக்கனை
விளையாட்டுத்தோளாய்
எடுத்துக்கொண்ட
அறிவின் பைங்கிளி
விரித்த பஞ்சுச்சிறகில்
படபடப்பது
அச்சம் அகன்ற
அழகின் அறிவு அல்லது
அறிவின் அழகு.
கீட்ஸ் சொன்ன
ட்ரூத் பியூட்டி…
பியூட்டி ட்ரூத்
இதுவே.
பாராட்டுகள்
புதிய மாதவி அவர்களுக்கு.
====================ருத்ரா