வலி

This entry is part 19 of 38 in the series 10 ஜூலை 2011

சமீலா யூசுப் அலி
2011.06.28
முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்
காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள்.

ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க
முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும்.
தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம்
பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும்
முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள்.

வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது
தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் ஒத்தடம் தருவாள்
அந்திக் கருக்கலின் அவன் வருவான் ஆயிரம் பழு சுமந்து
கட்டிலில் சுருண்டிருக்கும் அவள் விழி கூட நோக்காதுரைப்பான்
‘ப்ச்… திரும்பவுமா’ …‘வலி’ யின் அடர்த்தியை அவளுக்குணர்த்தியவாறு.

சமீலா யூசுப் அலி
மாவனல்லை

Series Navigationஸ்வரதாளங்கள்..வட்டத்துக்குள் சதுரம்
author

சமீலா யூசுப் அலி

Similar Posts

Comments

  1. Avatar
    ramani says:

    His impervious response on the ‘recurrence’ is more painful than the excruciating physical pain. Somebody’s voice blaring incessantly inside the head and popping up of ma’s gesture in the memory are beautifully portrayed. My heart aches really

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *