வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!
(1819-1892)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
காத்திருக் கிறாள் எனக்காகக்
காரிகை ஒருத்தி !
எல்லாம் உள்ளது அவளிடம் !
இல்லையென அவள் எதுவும்
இழக்க வில்லை!
காமசக்தி இல்லையேல் மாந்தரிடம்
காணாது போகும் எல்லாம் !
அல்லது
தகுதி வாய்ந்த மனித
ஈர்மை
இல்லாமல் போயின் !
காம சக்தி
மானிடத்துக் கெல்லாம் அளிப்பது;
மேனி உடம்பு, ஆத்மாவை
ஆளுவது.
அர்த்தம், நிரூபணம், காவியம்,
அறிவிப்பு, விளைவு
தூய்மை, மென்மை, பெருமை,
தாய்மை மர்மம்,
உடல் நலம், நம்பிக்கை,
காதல் உணர்ச்சி, மன இச்சைகள்,
வனப்பு, புவித்தளச் சுகங்கள்,
அனைத்தும் அடங்கும் அங்கமாய்
காம சக்தியில்,
அல்லது
அதன் காரணத்தில் !
ஒளிமறை வின்றி
நான் பேணும் ஆணும் அறிந்து
ஏற்றுக் கொள்வது
காமம் தரும் நலத்தை !
ஒளிமறை வின்றி
நான் விரும்பும் மாதரும் அறிந்து
ஏற்றுக் கொள்வது
காமம் தரும் சுகத்தை !
நழுவிச் செல்வேன் நானுடனே
அன்பு உணர்வற்ற
நங்கையரை விட்டு விலகி !
எனக்காகக் காத்திருக்கும்
வனிதை யோடு நான் வசிப்பேன்.
கணப்பு உதிரம் ஓடும்
காரிகை யோடு நானிருப்பேன் !
என் தகுதிக் கேற்ற
பெண்ணுடன் நான் தங்குவேன்.
என்னைப் பிறர் புரிந்திட
முன் வருவேன்.
என்னை மறுக்காத மாதருடன்
இருக்க விழைவேன்.
ஏற்றவரா அவர் எனக்கென்று
சோதிப்பேன்.
அம்மாத ருக்கு ஏற்ற
உடற்கட்டு உள்ள பதியென்று
உண்மை சொல்வேன்.
+++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [December 18, 2012]
****************
- மருமகளின் மர்மம் 8
- மறந்து போன நடிகை
- குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்
- “ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி
- சீதாயணம் நாடகம் -12 படக்கதை -12
- புகழ் பெற்ற ஏழைகள் 38.கருப்புக் காந்தி எனப் போற்றப்பட்ட ஏழை…
- ஜாக்கி சான் 21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்
- சொந்தங்களும் உறவுகளும்
- காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA
- சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!
- சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.
- திண்ணையின் இலக்கியத் தடம்-14
- கடற்கரைச் சிற்பங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .
- அன்பு மகளுக்கு..
- மேடம் ரோஸட் ( 1945)
- அதிகாரி
- பாசத்தின் விலை
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)
- தேவயானியும் தமிழக மீனவனும்…
- இயற்கையைக் காப்போம்
- நீங்காத நினைவுகள் – 26 –