வால்ட் விட்மன் வசனக் கவிதை – 90
(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Song of the Open Road)
(திறந்த பாதைப் பாட்டு -2)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நீ செல்லும் பாதை மேல்
நான் நடந்த பொழுது
சுற்றிலும் நான் பார்த்தேன்;
நீ மட்டுமின்றிப் பிறரும் அங்கிருந்தார் !
தெரியாதவை கூட
அங்கிருப்பதை நம்பினேன் !
இங்கிருப்பவை நினைவிற் கொள்ளும்
ஆழமான பாடங்கள் !
தனிப்பட்ட இச்சை இல்லை !
மறுப்பில்லை !
குட்டை மயிர்த் தலைக் கறுப்பரின்
குற்றங்கள், நோய் நொடிகள்,
கல்வி இன்மை
மறுக்கப் படாமல்
ஏற்றுக் கொள்ளப் படும் !
அவரது பிறப்பு,
மருத்துவர்
அவசர வெளியேற்றம்,
பிச்சைக் காரன் நடப்பொலி,
குடிகாரன் திக்கித்
தடுமாறும் வாய்ச்சொற்கள்,
தொழிலாளர்
சிரித்துக் கொட்ட மடிக்கும்
கூத்தாட்டம்,
விட்டோடும் வாலிபன்,
செல்வந்தர்
செல்லும் வாகனம்,
வீட்டை விட்டு
ஓடிச் செல்லும் இளம் தம்பதியர்,
வீண் கர்வக் காரன்
ஆகியோரையும் கண்டேன் !
காலையில் கடைக்குப் போகும்
மானிடன்,
கட்டில், மெத்தை,
நகருக்குள்
நகர்த்திச் செல்வோர்,
நகரிலிருந்து
வீடு திரும்புவோர், நம்மைக்
கடந்து செல்கிறார்,
உடன் செல்வேன் நானும்
எதுவும்
கடந்து செல்லும்,
தடுக்கப் படுவ தில்லை
என்றும்.
ஏற்றுக் கொள்ளப் படும்
எதுவும்.
என்னிச்சைக் குட்பட்டவை
எவையும்
தடுக்கப் படுவதில்லை.
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 27, 2014
- நுடக்குரங்கு
- பாஞ்சாலியின் புலம்பல்
- ஜெயமோகனின் புறப்பாடு
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 19
- இரா. நடராசனுக்கு ‘சாகித்ய அகடமி’ விருது
- 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி
- ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி
- வல்லானை கொன்றான்
- வால்மீனை முதன்முதல் நெருங்கிய ஐரோப்பிய விண்ணுளவி ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கப் போகிறது.
- நுனிப்புல் மேய்ச்சல்
- கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’
- காத்திருத்தலின் வலி
- பசலை பூத்தே…
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 90
- தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !
- அலைகள்
- மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு
- தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு
- கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- வாழ்க்கை ஒரு வானவில் – 18
- பாவண்ணன் கவிதைகள்
- அவருக்கென்று ஒரு மனம்
- ஆனந்த் பவன் [நாடகம்] வையவன், சென்னை காட்சி : 3