வால்ட் விட்மன் வசனக் கவிதை – 96

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

 

(1819-1892)

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Song of the Open Road)

(திறந்தவெளிப் பாட்டு -3)

 

ஆத்மாவின் ஆனந்தம்.

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

ஆத்மாவின் வெளிப் பயணம்

ஆனந்தம் அளிப்பது.

திறந்த வெளி எங்கணும்

காற்றினில் பரவி

காலங் காலமாய் என்றும்

காத்திருக்கும்.

நம்முள்ளே ஆத்மா இப்போது

ஊடுருவி

நாமெல்லாம் செம்மையாய்

உயிர்த்துள்ளோம் !

பண்பையும் சேர்த்து

ஊற்றுக் கனிரசம் போலிங்கு

எழுச்சி யுறும் !

ஈர நெஞ்சும், நேர்மைப் பண்பும்

மானிடரின்

தூய்மைக் கனிகள்.

காலையில் துளிர்க்கும்

மூலிகை விதைகள் வேரை விடத்

தூயவையோ

இனிய வையோ அல்ல !

நீர்மையும், நெறிப் பண்பும்

இளைய முதிய வம்சத்தின்

வேர்வைகள் !

அவற்றி லிருந்து பொங்கி

எழுவது

மானிடக் கவர்ச்சி;

எழிலும் சாதனையும்

அதன் முன்

எள்ளி நகைக்கப் படும் !

தொட்ட ணைக்கும் இச்சை 

அலைகள் போல்

நடுங்கிச் செல்லும் !

  

+++++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

  1. Jayabarathan [jayabarathans@gmail.com] October 9, 2014
Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *