Posted in

சலனக் குறிப்புகள்

This entry is part 42 of 44 in the series 16 அக்டோபர் 2011

நீச்சல்காரன்

எரிகிற கொள்ளியில்
சுள்ளிகள் எடுத்து
எரிக்க முனைந்தால்
பொசுங்கியது ஆசை

இது தான் வெற்றியென்று
முடித்துக் கொள்ள
முடியாமல் வெற்றிகரமாக
தோல்வி கொள்கிறேன்

கொதிக்கும் நீரில்
குதித்தாடும் குமிழ்கள்
வாய்பிளந்து மரணத்தை
குடிக்கும்

கற்பூரத்தை சர்க்கரை
என நிருபிக்க
சொன்ன பொய்கள்தான்
அதை காற்றிலே கரைத்துவிட்டது

புதிராக இருந்தாலும்
ஒரு திசை போதும்
மற்றவற்றை காட்டிக்கொடுக்க

திறந்திருந்த ஒன்றை
திறந்து வைத்தவர்
யாரென்கிறது
ஆற்றுப் பாலத்து கல்வெட்டு

ஊரெல்லாம் தூங்கிக்
கொண்டிருக்க மனித இனத்தையே
உலுப்பியது அலார ஒலி

Series Navigationஜுமானா ஜுனைட் கவிதைகள்பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *