Posted in

அடங்கிய எழுத்துக்கள்

This entry is part 16 of 43 in the series 29 மே 2011
உரத்துக் குரலிட்ட
பேனாக்களை
வானரங்கள் உடைத்து
மையை உறிஞ்ச
மௌனித்த செய்திகள்.

யாருமில்லாப் பொழுதில்
அலைகள்
சப்பித் துப்பிய சிப்பிகள்
கீறிப்போயின
கவிதையின் தொங்கல்கள்.

மிஞ்சிய காகிதத்தில்
தொடக்கங்கள்
தொங்கல்களோடு இணைய
இனி ஒருக்காலும்
வரப்போவதில்லை
அந்தப் பேனாக்கள்
செய்திகளிலும்கூட!!!

ஹேமா(சுவிஸ்)

 

Series Navigationராக்கெட் கூரியர்வட்டத்தில் புள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *