வேடிக்கை

This entry is part 5 of 38 in the series 10 ஜூலை 2011

வீதியின் வழியே சென்ற
பிச்சைக்காரனின் தேவை
உணவாய் இருந்தது
வழிப்போக்கனின் தேவை
முகவரியாய் இருந்தது
கடந்து சென்ற
மாணவர்களின் கண்கள்
மிரட்சியுடன் இருந்தது
குறிசொல்பவள் தேடினாள்
தனது பேச்சுக்குத் தலையாட்டும்
ஒருத்தியை
சோப்பு விற்பவள்
யோசித்துக் கொண்டே
வந்தாள்
இன்று யார் தலையில்
கட்டலாமென்று
தபால்காரரின்
கையிலிருக்கும் கடிதங்களின் கனம்
சற்றே குறைந்தது
நடைப்பயிற்சி செய்பவர்கள்
எய்யப்பட்ட அம்புபோல
விரைந்து சென்றார்கள்
ஐஸ்கிரீம் வணடியில்
எண்பதுகளில் வெளிவந்த
பாடல்கள் ஒலித்தது
காய்கறிகாரனின் கவனமெல்லாம்
வியாபாரத்திலேயே இருந்தது
குழந்தைகளின் விளையாட்டை
தெய்வம் கண்டுகளித்தது.

Series Navigationபயணம்“கானுறை வேங்கை” விமர்சனம்

1 Comment

  1. Avatar chithra

    Very nice :) நிஜமாகவே ,மாடியிலிருந்து, வேடிக்கை பார்ப்பது போலவே இருந்தது :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *