Posted in

துளித்துளி

This entry is part 24 of 44 in the series 30 அக்டோபர் 2011

சிலந்தி வலையில்
சிதறித்தெளித்த
மழைத்துளி
சிறைப்பட்டுக்கிடந்த
சிலந்தியின் கால்களையும்
நனைத்திருந்தது ஈரம்.

குடித்துவிட்டுக்கீழே வைத்த
உள்ளிருப்பவை வெளித்தெரியும்
கண்ணாடிக்குவளையில்
அடியிலிருந்து மேலே
வந்த மீதமுள்ள நீர்
சிறு பாசிமணிகள் போல்
அதன் சுவரில்
ஒட்டிக்கொண்டிருந்தது
கண்ணாடிக்குள்ளும் ஈரம்.

அடித்துப்பெய்த
மழையின் சாரல்கள்
என் ஜன்னல் கம்பிகளிலும்
தொக்கி நின்று
கொண்டிருக்கின்றன.
இரும்புக்கம்பிகளிலும் ஈரம்.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *