Posted in

அன்பின் அரவம்

This entry is part 35 of 39 in the series 18 டிசம்பர் 2011


குமரி எஸ். நீலகண்டன்

 

யாரோ ஒருவருடன்

சதா பேசிக் கொண்டே

இருக்கிறார்கள்.

சுற்றி யாருமில்லை.

அலைபேசியில்தான்

பேசிக் கொண்டே

இருக்கிறார்கள்.

 

அல்லது யாரோ

ஒருவருடன்

பேசிக் கொண்டே

இருக்கிறார்கள்.

உற்று நோக்கி

ஒருமித்தப் பார்வையுடன்

பேசிக் கொண்டே

இருக்கிறார்கள்.

சுற்றி யாருமில்லை.

அலைபேசியுமில்லை.

 

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationகாதல் கொடைசுனாமியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *