என் நிழலுக்குள்ளேயே
அவன் நிழல்கூட விழாதுதான்
அடங்கி நடந்துகொண்டிருந்தான்
குழந்தை.
கேள்விகள்
காம்பாய் வளைந்திருக்க
அவன் பதில்கள்
அதில் ஆச்சர்யமாய்ப் பூத்திருந்தன.
ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும்போதே
தடம் மாறியதறியாது
வேறொன்றில்
நின்று கொண்டிருக்கும் மனம்
குழந்தைக்கு மட்டுமில்லாது
எனக்கும் ஆனதில்
மீன்களின் ஞாபகம்
வியாபித்திருக்கும்
குளத்தின் நினைவில்
கருக்கொண்டிருந்த
கவிதை விளைத்தமௌனத்தில்
துணுக்குற்றவனின்
கவனம் ஈர்க்க
” ஒரு ஊரில் ” என ஆரம்பித்தால்
சொல்லிவிடப் பயிற்றுவித்திருந்த
ராஜவம்சத் தொடரைச்
சொல்லத் தூண்டியபோது
சொல்லாது
வேரோடு அறுத்து
” ஒருத்தருமில்லை” என்றாக்கியது
மழலைக் கோபம்.
—- ரமணி
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-28
- அறியான்
- ‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’
- நழுவும் உலகின் பிம்பம்
- குசினிக்குள் ஒரு கூக்குரல்
- சிற்றிதழ் அறிமுகம் ‘ முள் ‘
- லிங்குசாமியின் ‘ வேட்டை ‘
- மாநகர பகீருந்துகள்
- மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்
- நல்ல தங்காள்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புராதனக் காதல் புது வடிவங்களில் ! (கவிதை -57)
- ஒரு நாள் மாலை அளவளாவல் (2)
- சோ – தர்பார்
- மூன்று நாய்கள்
- உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்
- சந்திரலேகா அல்லது நடனம்..
- புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)
- இறந்து கிடக்கும் ஊர்
- பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா (Revised -2)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 7
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 10
- திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் மு வ நூற்றாண்டு விழா
- ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்
- தனி ஒருவனுக்கு
- துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்
- முன்னணியின் பின்னணிகள் – 23
- பயணி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 6
//கேள்விகள்
காம்பாய் வளைந்திருக்க
அவன் பதில்கள்
அதில் ஆச்சர்யமாய்ப் பூத்திருந்தன//
smart, Ramani
Thank You Sabir
Oru ooril…orutharumellai….reflect changing mood and innocence anger of the child..good ramani keep it up!