நண்பா!
என் வாழ்க்கையைத் தனியே
பிரித்துவிட முடியாதபடி
எப்படி நீ
என் ஒவ்வொரு நாளிலும்
பின்னிப் பிணைந்திருக்கிறாய்!
உன்னைச் சேர்த்துச் சொல்லாத
ஒரு நிகழ்வைக்கூட
என்னால் சொல்லிவிட முடியாது.
இப்போது
வெறும் ஞாபகங்களாக
மட்டுமே போய்விட்ட உன்னை
எப்படி மீட்டெடுப்பது?
கல்லால் சிலை வடித்தால்
உடைந்து போகலாம்.
இரும்போ துருப்பிடிக்கும்
மரமோ உலுத்துவிடும்
எல்லாம் எப்படியோ
மறைந்துபோகும்.
எதைக்கொண்டு செய்தால்
நிரந்தரமாய் அதில் நீ உறைவாய்?
என்னிடமோ
வார்த்தைகள் மட்டுமே உள்ளன
கொஞ்சமாய்.
அவைகொண்டு எழுதினால்
கவிதையாய் நீ வருவாயா
எனத் தெரியவில்லை.
இந்த ஆரம்பமே கவிதையாகிவிடும்
என்றில்லாவிடினும்
கவிதை என்பதும்
ஒரு நல்ல ஆரம்பம்தானே?
—- ரமணி
- பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்
- ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்
- ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 2
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)
- குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை
- சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘
- வளவ.துரையனின் நேர்காணல்
- சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 30
- பழமொழிகளில் நிலையாமை
- சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை
- சுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்
- நினைவுகளின் சுவட்டில் – (84)
- வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…
- கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1
- நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…
- இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு
- முன்னணியின் பின்னணிகள் – 25
- சுப்ரமணிய சுவாமியும் – சுப்ரீம் கோர்ட்டும்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9
- காமம்
- கவிதை கொண்டு வரும் நண்பன்
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்
- உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்
- பேஸ்புக் பயன்பாடுகள் – 1
- தற்கொலை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 8
- மும்பை தமிழ் அமைப்புகள் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா
The kavingyar narrates the true feelings of a person affected due to sudden demise of his dearest friend…excellent…the friend may leave physically but his memories are permanent…he may not come physically perhaps living in ur thought forever…