This entry is part 35 of 42 in the series 25 மார்ச் 2012

எழுதியவன்
தமது குறைகள் எதையும்
சொல்ல விழையாத
நாட்குறிப்பு போல
உன் பேச்சு இன்று
செயற்கையாக இருக்கிறது

பலநாட்கள் தூசி
படிந்து திடீரெனப்பெய்த
மழையில் கழுவிவிடப்பட்ட
இலைகள் போல
உன் பேச்சு இன்று
இயற்கையாக இருக்கிறது.

நாட்குறிப்பின் பக்கங்கள்
போலிருக்கும் இலைகளை
அந்த மரம் உதிர்த்து விடும்
பொழுது உன்னிலையை
என்னவென்று அழைப்பது ?

– சின்னப்பய

Series Navigationபேனா பேசிடும்…”கீரை வாங்கலியோ…கீராய்…!”