எண்ணங்களின் கனத்தில்
உடைந்து விழுந்துவிட்டேனா
என்று தெரியவில்லை.
இல்லை மௌனம்தான்
பெருஞ்சுமையாய்
அழுத்திற்றோ என்னவோ!
ரயில் விபத்தில்
சிக்கிக்கொண்ட பெட்டிகள்போல
என் எண்ணங்களும்
ஒன்றின்மேல் ஒன்று
ஏறிக்கொண்டு
காயப்பட்டுக் கிடக்கிறது.
எனினும்
தூரத்துச் சந்திரனோடு
பயணித்து
என் விடியலைக் கண்டுவிடலாம்
என்ற என் பால்வீதிக் கனவைக்
கவிதையாக்கிக் கொடுத்தேன்.
நம்பிக்கைகள் அடர்ந்த காட்டில்
கடவுளை முன்னிறுத்தி
நான் உலகத்திற்கான
கனவு விடியலை
என் வாழ்க்கையின் பாடலாகக்
காட்டிவிட்டதாகப்
பெருமை பேசுகிறார்கள்!
ஒரு பாடலின் அளவில்
என் வாழ்க்கையை அளந்ததில்
மீண்டும் என் நினைவுகள்
விபத்திற்குள்ளான
ரயில் பெட்டிகளாயிற்று.
- புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012
- தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்
- சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
- பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
- 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- கையோடு களிமண்..!
- ஆலிங்கனம்
- எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
- புரட்சி
- நிபந்தனை
- சின்ன மகள் கேள்விகள்
- பழமொழிகளில் தெய்வங்கள்
- முள்வெளி அத்தியாயம் -5
- ஒப்பனை …
- பிறந்தாள் ஒரு பெண்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
- சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
- ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
- சாதிகளின் அவசியம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
- ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22
- கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
- கடவுள் மனிதன்.
- கண்ணால் காண்பதும்…
- தூரிகை
- ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
- நிகழ்வு
- உதிரும் சிறகு
- சூல் கொண்டேன்!
- தூறலுக்குள் இடி இறக்காதீர்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
- ஆர்ய பட்டா மண்
- பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “
- அம்மா
- விபத்தில் வாழ்க்கை
- இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை
//ஒரு பாடலின் அளவில்
என் வாழ்க்கையை அளந்ததில்/
எழுதிப் படைக்கும் எல்லோருக்கும் இப்படியொரு குளறுபடி நிகழ்ந்திராமலில்லை. யாவர் சார்பாகவுமா இக்கவிதை?
நயம் கவர்ந்தது ரமணி.
வாழ்த்துகள்.
-சபீர் அபு-ஷாருக்
ஒரு கவிதைக்குள் கவிஞனின் வாழ்க்கை அடைக்கப்படுவது அல்லது வாழ்க்கையே கவிதயாகிப்போவது பூர்ண ஜென்ம புண்ணியம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்…..யதார்த்தமான கவிதை ரமணி..
ரயில் விபத்தில்
சிக்கிக்கொண்ட பெட்டிகள்போல
என் எண்ணங்களும்
ஒன்றின்மேல் ஒன்று
ஏறிக்கொண்டு
காயப்பட்டுக் கிடக்கிறது.
Excellent narration ramani…the kavithai shows that u r so much attached to railways.
Thanks Sabir, Soma and Ganesan for your comments.