Posted in

இந்நிமிடம் ..

This entry is part 40 of 41 in the series 13 மே 2012

இந்நிமிட குப்பிக்குள்

பழைய நினைவுகளை

புதிய நினைவுகளை

திணிக்க திணிக்க

திமிறி ஓடுகிறது அமைதி..

இந்நிமிட கொள் அளவில்

வைக்க வேண்டியதை மட்டும்

வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம்

அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் ..

மாற்று நிறங்களின் தறி பாவில்

ஊடு நூலாக – வளைந்து புகுந்து

அமைதியை நெய்ந்து தருகிறது

இந்நிமிடங்கள்…

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigation”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வதுவெயில் விளையாடும் களம்

One thought on “இந்நிமிடம் ..

  1. அமைதியை நெய்ந்து தருகிறது

    இந்நிமிடங்கள்…

    vaazhkai yenum azhagaana aadaiyai naam anivadharku…well done chitra!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *