என்னைப் போல் ஒருவன்

This entry is part 27 of 31 in the series 2 டிசம்பர் 2012

என்னை யாரோ
பின்தொடருகிறார்கள்
எனக்கு  பகைவரென்று
யாருமில்லை
கடன் வாங்கி
கொடுக்காமல் இருந்ததில்லை
எடுத்தெறிந்து யாரையும்
பேசுவதில்லை
அடுத்தவர் மனைவியை
நிமிர்ந்து  பார்ப்பது கூட இல்லை
தீவிரவாதியோ என
சந்தேகப்படுவார்கள்  என்று
தாடி கூட  வைப்பதில்லை
சர்ச்சைக்குரிய  நாவல் எதையும்
நான் எழுதவில்லை
வெளிநாட்டுக்கு
உளவறிந்து சொன்னதில்லை
என் குழந்தையைத்  தவிர
வேறெந்த குழந்தையையும்
தூக்கி  கொஞ்சுவதில்லை
அருகாமையில் எந்த
குண்டுவெடிப்பும்  நடக்கவில்லை
எந்த ஒரு  சித்தாந்தமும்
என்னை ஈர்த்ததில்லை
என்னைப் போல் ஒருவன்
இருப்பானோ என்று
தோன்றாமல் இல்லை.

Series Navigationகுருபிஞ்சு மனம் சாட்சி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *