Posted in

பொம்மலாட்டம்

This entry is part 11 of 30 in the series 20 ஜனவரி 2013

கவிஞன் என்ற

அடையாளத்திற்காக

வளர்த்த குறுந்தாடி…….

 

பக்கத்திற்கு பக்கம்

பதிய வைக்க

அழகிய புகைப்படம்………

 

சுயமாய் அச்சடித்து

தொகுப்பாய் கொடுக்க

தேவையான பணம்…..

 

எல்லாவற்றையும்

வசப்படுத்திய பின்பும்

ஏனோ

வசப்பட மறுக்கிறது

கவிதை மட்டும்….!

 

மு.கோபி சரபோஜி.

Series Navigationசரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4கிளைகளின் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *