This entry is part 24 of 30 in the series 20 ஜனவரி 2013

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

வணக்கம். புனைப்பெயர் அவர்களுக்குப் பதில் அனுப்பியுல்ளேன்.

மட்டுறுத்தலில் நிறுத்திவிட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். இன்னும் ஒரு பதிவுடன் தொடரை முடிக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 60 களில் எழுத்தாளர்களுக்கு ஓர் ஆசை இருக்கும் விகடனில் எழுத வேண்டும் என்று. இணைய இதழ்களில் திண்ணையில் எழுத வேண்டும் என்று ஆசை வரும். “சில சந்திப்புகளூம் சில நிகழ்வுகளும் “ இது ஓர் அரசியல் தொடர். குமுதம் பால்யூ முதல் அண்ணா கண்ணன் வரை என்னை வலியுறுத்தினா ர்கள். ஏனோ அதை எழுத மனம் தயாராகவில்லை ஆனால் சமுதாயத்தில் ஒவ்வொன்றையும் மாற்றிச் சொல்லி மக்களை மாக்களாகிவிட்டனரே. அந்த வரலாறு எழுதப்பட வேண்டும். வர்ணாச்ரம் முதல் எல்லாம் அலசப் பட வேண்டும். சாதி, மதம் காரணமாக எத்தனை பிரிவினைகள். அவைகளின் வரலாறு எழுதப்பட வேண்டும். பிராமணன் மேல் காழ்ப்புணர்ச்சிக்கு முதன் முதலில் வித்தூன்றியவன் தமிழனல்ல. ஆதாரம் இருக்கின்றது. இவைகள் பதியப்பட வேண்டும். சித்தர்கள் பெரிய விஞ்ஞானிகள். அவர்கள் கண்டு பிடித்துவைகளை விஞ்ஞானப் பூர்வமாக்க் கூற வேண்டும். தனிமனித ஒழுக்கம் பாதுகாக்க ஒவ்வொருவனும் தன் ஆழ்மன சக்தியை உணர வேண்டும். அதற்கு வழிவகைகள் எளிய முறையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இத்தனையும் திண்ணையில் எழுத விரும்பினேன். அனால் நான் வயதானவள். நோயாளி. மனத்தை வருத்தும் வார்த்தைகளைத் தாங்கும் வலு எனக்கில்லை. அதனால் வருத்த்துடன் அடுத்த இதழுடன் முடிக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திண்ணை வளர வேண்டும். தலை சிறந்து இருக்க வேண்டும். திண்ணை நிர்வாகத்திற்கு எல்லாம்வல்ல இறைவன் சக்தி கொடுக்கட்டும்

சீதாலட்சுமி

Series Navigationஅக்னிப்பிரவேசம்-19வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2