கேள்

This entry is part 16 of 31 in the series 31 மார்ச் 2013

 

 

காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால்

அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது

 

ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால்

முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது.

 

சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால்

பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது

 

அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால்

நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது

 

மானின் விழிகளைக்கேட்கலாமென்றால்

அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடைக்கிறது

 

உன் மனத்தைக் கேட்கலாமென்றால்

அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கிறது

 

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationஅமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழாஆத்தா…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *