கு.அழகர்சாமி
நெல் விளையும் காவிரி பூமியிலே
கல் விளைத்த கவின் கோயில் அதிசியம்.
பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட
அருஞ்செயலின் கலைச்சிற்ப சாகசம்.
ஏக வெளியைக் காதலித்துக் கைப்பிடித்து
எல்லை தாண்டிய கோபுரக் கலை உச்சம்.
நடமாடாக் கற்கோயில் கலை நடனம்.
நடுவெளியில் நிலத்தொளிரும் கலைதீபம்.
சட்டென இங்கென்று தென்பட்டுச் சிரிக்கும்
காட்டுப் பூவெனும் கட்டிடக் கலையின் மந்தகாசம்.
பறவைகள் வட்டமிட்டுப் பறந்து வியந்து பாடும்
வீழாநிழல் கல்லால(ய) மரமெனும் வித்தகம்.
நேர்கண்டவுடன் நிறைவாகி கண்கள் வழி உள்புக்கு
எளிதினும் எளிதாய் வசமாகும்
அரிதினும் அரிதான காட்சி வசீகரம்.
கடந்து கடந்து செல்லும் காலம் விடும் சவாலுக்கு
கடைசி வரை பதில் சொல்லும் கலைத் துணிகரம்.
காலத்தின் தீராத பக்கங்களில் கடல் கடந்து வென்ற
சோழன் இராஜராஜன் போட்ட அழியாக் கையெழுத்து.
தொடர்ந்து கொண்டேயிருக்கும் தமிழர்
படைப்பு தாகத்தின் வற்றாத கல் ஊற்று.
நாட்டிய கரணமெல்லாம் காட்டும்
ஈசனைப் போற்றும் இந்தப் ’பெரியகோயில்’
சாற்றும் கலை ஞானம் வெறுஞ் சாத்திரமல்ல.
தணியாக் கலைதவத்தில் தமிழர் நிகழ்த்திய
நிலத்தில் மெய்ப்படும் நிலைத்த கலைப் பூரணம்.
’உம் பெருங்கனவின் செயலில் விளையும்
புதிய கலைப்படைப்பின் தனிப்பெருமைத் திறமென்ன?’
என்று
எம் முன்னோர் விட்டுப் போன
காலத்திற்கும் எதிரொலிக்கும் கலைதீரச் சவால்.
- தாயின் அரவணைப்பு
- அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘
- புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
- 3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்
- நடுங்கும் என் கரங்கள்…
- உனக்காக ஒரு முறை
- இந்திரா
- உழவு
- ஆகஸ்ட் 15
- இராஜராஜன் கையெழுத்து.
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15
- முக்கோணக் கிளிகள் ! [நெடுங்கதை] மீள் பதிப்பு
- சிவதாண்டவம்
- கொம்புத்தேன்
- வசை பாடல்
- மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு
- பாரம்பரிய இரகசியம்
- பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1
- வேர் மறந்த தளிர்கள் – 29
- விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !
- கருத்தரங்க அழைப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30
- விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்
- சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…
- அசடு
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33
- மங்கோலியன் – II
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23
In other words a concrete manifestation
Of the magnificient Raja Rajan!
Rythmic poetry
Mr.Ku. Azhakarsamy!
கவிதை அருமை , வாழ்த்துககள் திரு கு. அழகர்சாமி.