நூலறுந்த சுதந்திரம்

This entry is part 20 of 33 in the series 4 ஜனவரி 2015

 

 

சத்யானந்தன்

 

பிற பட்டங்களின் நூலை

அறுத்தெறிந்த காலம் முடிந்தது

மரத்தின் நெருங்கிய

கிளைகளில் அடைக்கலமானது

இந்தப் பட்டம்

 

நூலின் காற்றின்

இயக்குதலிலிருந்து

பெற்ற விடுதலை

இன்னொரு சிறை

எல்லாம் ஒன்றே

என்னும் ஞானம் சித்தித்தது

அதற்கு

 

கவனிப்புடன் சேர்ந்து

தானும் காலாவதியாகும்

நாட்காட்டியின் இதழ்களில்

ஒன்றாய் இருப்பதிலும்

இது மேல்

என்பதையும்

அது அறியும்

 

365 சிறகை

வெவ்வேறு திசையில்

வெவ்வேறு வீச்சில்

அசைக்கும் சுதந்திரம்

காலத்துக்கு

மட்டுந்தான்

 

காலவதியாகும்

கட்டாயமும்

இல்லை

 

 

Series Navigationஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹிசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு  உலை முழுத்திறனில் இயங்குகிறது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *