Posted in

ஞானக்கண் மானிடன்

This entry is part 11 of 12 in the series 15 மார்ச் 2020
image.png

சி. ஜெயபாரதன், கனடா

ஞானக்கண் மானிடன்

சி. ஜெயபாரதன், கனடா

பூனைக் கண்ணுக்கு 

தெரியும்

இரவினில் வெளிச்சம் !

நரிக்குத் தெரியுது 

இருட்பாதை !

கருந்துளை,

கருஞ்சக்தி, கரும்பிண்டம்,

கருமை விசைபோல்

காரிருளில்

மறைந்திருக்கும் 

கடவுள்

ஊனக் கண்ணுக்கு

தெரியுதா என 

பூனையைக் கேட்டேன் !

மியாவ்”, என்று

பாடி விட்டுப் போனது ! 

கோனார் நோட்சில் நான்

அர்த்தம் தேடினேன் !

தூரத்தே 

கோர சுனாமி 

பாம்பு போல் நகர்வது

நாயின் காதில் 

பட்டு 

மேட்டுக்கு ஏறுது.

கருமை நிறக்

கடவுள்

பூனைக் கண்ணுக்கு

தெரியுது ! 

சொல்ல முடிய வில்லை !

ஊனக்கண் 

மானிட னுக்கு கடவுள்

தெரிவ தில்லை.

ஞானக்கண்

வேண்டும்  முதலில் 

தோண்டிப் பார் 

மூளையில்.

++++++++++++

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்மாவோவால் உருவான கொரோனா வைரஸ் நோய்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *