பெயின்ட் அடிக்கும் விடலை

author
0 minutes, 4 seconds Read
This entry is part 3 of 5 in the series 9 பிப்ரவரி 2025

சசிகலா விஸ்வநாதன்

பதினெட்டு வயது

இளந்தாரி பையன்

பல வண்ணங்கள் தெறித்து,பழசான

ஆங்காங்கே நைந்து போன கால்சராய்;

என்றோ மஞ்சள் வண்ணத்தில் இருந்து 

இன்று பல வண்ண தெறிப்புகளின் கோலம்

 வண்ணக் கலவையில் அவசரமாய் முக்கியெடுத்து

 பிழிந்தும், பிழியாமலும் உலர்த்தினாற் போல்,

மேற்சட்டை  அவன்

மார்பு கூட்டை 

மறைக்க;சட்டையின் நீண்டு தொங்கும் பாகம் 

 கையைத் துடைக்க அவன் மேலிழுக்க

ஒட்டிய வயிற்றின் வறுமை காட்டியது.

சுவரில் பல்லி போல் ஒட்டிக்கொண்டு,

பூரான் போல் உரு மாறி

கொள்ளையன் போல்  முகத்தை 

மூடி,வண்ணம்

 பூசிக்கொண்டிருந்தவன்;

ஏணி முறிந்து 

கீழே விழ,

என் கண் முன் 

கரப்பான்பூச்சி 

போல் விழுந்தான்.

தன் தலையை சற்றே

உயர்த்திய வண்ணம்;

விழுந்து எழுந்து பழக்கம் போலும்!

கை கொடுத்து தூக்க முயற்ச்சிக்க;

கண்ணடித்து தவிர்த்தான்;

கண்மூடி படுத்தான்; அப்படியே.

திகைப்புற்று நான் நிற்கும் நேரம்;

அரவம் கேட்டு  வந்த

அவர்” என்னடா! என்க;

பேசாமல் கண்மூடி படுத்தே இருந்தான்.

“சரி! போயிட்டு நாளைக்கு வாடா” என்றதும்,

நான் அளித்த தேநீரை பருகி விட்டு,

என்பக்கம் ஒரு சிமிட்டல் வீசி,

பதினெட்டு வயது பாலகனாய்,

ஓடியே போனான்; ஓரே நொடியில்.

சசிகலா விஸ்வநாதன்

Series Navigationஉறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?சாம்பல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *