-ஜெயானந்தன்
அவளுக்கு ரூம் கிடைக்கவில்லை.
பிறகு, அவனது ரூமில்தான் தங்க நேர்ந்தது.
அவள் மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை செய்வதால், அவளுக்கு அவனோடு அந்த இரவு தங்குவதில் சிரமமில்லை.
அவன் தான் நெளிந்தான். கையில் க்யூப் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
அவள் நைட் ஆடையில் வந்தாள்.
பாத்ரூமில் அவளது உள்ளாடைக்கிடந்தது.
அவன் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
அவள் ஒரு மேனேஜ்மெண்ட் நாவலை கையில் வைத்துக்கொண்டு, அவனை நோட்டமிட்டாள்.
“அவன் ஒருமுறை பாத்ரூம் சென்றுவந்தான்”.
அவன் இன்னமும் க்யூப்தான் விளையாடிக்கொண்டிருந்தான்.
சிகப்பு சதுரங்களை தடவி தடவிக்கொடுத்துக்கொண்டே, அவற்றை முதலில் போட முயற்சித்தான்.
அவள் கேட்டாள், “ஏன் சிகப்புக்கட்டையை தேடிதேடி போடுகின்றாய் “.
அதில்தானே” கிக் “,இருக்கின்றது என்றான்.
“நீங்க, ஸ்ரீரங்கம் பாலாடைப்போல்”‘ இருக்கின்றீர்கள் என்றான்.
அவள் நெளிந்தாள்.
எங்க அப்பா எப்பவும் டபீர்குளம் மஸ்தான் கறிக்கடையில்தான், வெள்ளாட்டுக்கறி வாங்குவார் என்றான்.
அவர் கடை கறியில், சுத்தமான புதுக்கறி கிடைக்கும் என்றான். கொஞ்சம் ரத்த வாடையும், கொழுப்பு வாடையும் கலந்துவரும், என்று சிரித்தான்.
ஸ்ரீரங்கத்து புதுமைப்பெண் “ரங்கனை “,
துணைக்கு அழைத்தாள்.
தற்போது, சண்முக கவசத்தையும் சொல்ல ஆரம்பித்தாள்.
மறுபடியும் அவன் பாத்ரூம் சென்றுவந்தான். வெளியே வந்தவுடன் பெரிய ஏப்பமிட்டான்.
அதில் தீஞ்ச துணிவாடை அடித்தது.
“தக் லஃப் பார்த்திட்டிங்களா மாமி “,என்றான்.
அந்த படத்தில் திரிஷாவை, அவளுக்கு பிடிக்க வில்லை என்றாள்.
திரிஷாதான் அந்த படத்தின் கிக்.
வயதானவர்களின் சபலத்தை, கலை வடிவில் மணி சொல்ல முயன்று, கமலின் பாரதியார் முகம் அழிந்துவிட்டது என்றான்.
உடனடியாக, அவள் பாத்ரூம் சென்று பார்த்தாள்.
அவளது பிராவும், உள்ளாடையும் காணவில்லை. அவைகளைத்தான் அவன் தின்று ஏப்பம் விட்டதாக எண்ணி
பயந்துக்கொண்டே வெளியே வந்தாள்.
அவள் தற்போது கொஞ்சம்அதிகமாகவே பயத்தில் நடுங்கினாள்.
அம்மாவுக்கு போன் போட்டு பேசினாள்.
நரசிம்ம மந்திரத்தை சபிக்க சொன்னாள் அம்மா.
“காவிரிலே வெள்ளம் ஓடுதா”, என தீடீரென கேட்டான்.
ஏன் என்றாள்.
“இல்ல, அங்குள்ள புல் தரைகள், இனிப்பாக இருக்குமே என்றான்”.
அவளுக்கு ஒன்றுமை புரியவில்லை
என்ன சொல்ற என திருப்பிக்கேட்டாள்.
அங்கு மேய்ந்த ஆடுகளின் கறி, சாப்பிட அருமையாக இருக்கும், அதுவும் ரத்தம் சொட்டச்சொட்ட என்றான். கொஞ்சம் கொழுப்பு வாடை இருந்தால் தான் கறிக்குழம்பே சூப்பர இருக்கும் என்றான் .
அவனது நாக்கு நீளமாக வெளியே வந்து, உள்ளே சென்றது.
ஸ்ரீரங்கம் தேவதை ,சகலகலாவல்லியாக நெளிந்தாள்.
“கோவிந்தா, கோவிந்தா!! “,என கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.
அவள் கண்களுக்கு அவன் ஒரு “சிறுத்தையாக “, தெரிந்தான்.
அவள் ,நைட்டியோடு, வராண்டாவில்
ஹேல்ப், ஹேல்ப். …..என கதறிய படி ஓடினாள்.
ஓட்டல் மேனேஜர் பாதி தூக்கத்திலிருந்து எழுந்து, அவரும் ஓடினார்.
சிறுத்தை அமைதியாக, ரூமில் தூங்கிக்கொண்டிருந்தது.
– ஜெயானந்தன்.