ஜெயானந்தன். அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது. போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது. மகாபாரத்தின், ஸ்தீரி பருவத்தின் காட்சிகளை மேடையின் பின்புறத்தில் டிரஸ்கி மருதுவின் கைவண்ணத்தில் ஓவியங்களாக அமைத்து, நாடக நடிகர்கள் உடைகள் வெண்மையில் கொடுத்துள்ளனர். அமைதிக்கான நிறமாக வெண்மையே ஓளிரட்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதே , மங்கையின் எண்ணமாக தெரிகின்றது. மகாபாரதப்போர், இன்னும் முடியவில்லை. அது ஈழப்போராக, உக்ரைன்-ரஷ்யப் போராக, இஸ்ரேல்- காஸா போராக தொடர்கின்றது என்று சொல்லும், […]
_________________ எத்தனை நாள்தான் ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறை பார்த்தாலும் அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான். எத்தனை முறை நடந்தாலும் அதேபாதை, அதே வாழ்க்கைதான்! ஜெயானந்தன்.
வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறந்து, அதன் பயணத்தை முடித்துள்ளது .பிரபஞ்சன் , புதுமைப்பித்தனை பொய்யாக்கிவிட்டார். எழுத்தை நம்பி யாரும் வாழ்வை நடத்தமுடியாது என்ற நினைப்பை, அவர் கடந்து சென்றுவிட்டார், நமக்காக வாழ்ந்த நினைவாக,அவரது நிறைவான எழுத்து முழு நம்பிக்கையுடன் நம்மிடையே உலா வருகின்றது. புதுச்சேரி, பல சிறந்த படைப்பாளிகளை உருவாக்கியுள்ளது. பாரதி, தமிழ் நாட்டில் பிறந்து, புதுச்சேரியில், தஞ்சம் புகுந்து, அவரது […]
அலிசா அபீஸ். வாடகை வீட்டில் உனது கோட்டை கழட்டி துருபிடித்த ஸ்டாண்டில் தொங்கவிடு. அலுத்துப் போன காலனிகளை இங்கொன்றும் அங்கொன்றாய் வீசு. உடலை சாய்க்க மர நாற்காலியை தேடும் கண்களில் தெரிவது குவிந்து போன துணிகளின் கூட்டம். கவிதை எழுத எந்த வீட்டை தேட எல்லா வீடுகளிலும் குப்பைகள்தான் மிச்சம் ! தமிழில்;- ஜெயானந்தன்
கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான் ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே ஒத்துழைக்காமல், முதுமையின் தள்ளாட்டாத்தில்தான் இருந்தார். அசோகமித்திரன், ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து சென்றுவிட்டார்.அவரது ஐதாராபாத் வாழ்க்கையும், சென்னை வாழ்க்கையும் கொடுத்த வாழ்க்கைப்பாடங்களே அவரது எழுத்துக்களாய் நம்மிடம் வாழ்கின்றது. அவரது எழுத்துக்களைப்பற்றி, இனி ஒரு வாரமோ, […]
சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் “விளக்கு” அமைப்பையும்,அதன் நோங்கங்களையும் பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின் நவீன எழுத்துக்களையும், எழுத்தாளர்களயும் கண்டு கொள்ளாமல் செல்லும் நிலையில், விளக்கு போன்ற அமைப்புக்கள்தான், அவர்களை கொளரவிக்கவும், நல்ல எழுத்துக்களை வெளியிட்டும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒரு பாதை அமைத்து தரவேண்டும் என்றார். இந்தாண்டு, ஒரு […]
புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம். பல புனிதர்கள் அங்கிருந்து, நம்மை ஆண்டுள்ளனர். பல நேர்மையான,சிறந்த,அரசியல் அறிவும், நாவன்மையும் கொண்ட பல தலைவர்கள் நாம் பார்த்துள்ளோம். ஓமந்தூரர் முதல், ஜெயலலிதா வரை பல முதன் மந்திரிகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர். தீடீரென்று, அரசியல் வானில், மன்னார்குடி மங்காத்தா என்ற துர்நட்சத்திரம் ஒன்று தோன்றி, ஒரு ரங்கத்து மாமியை விழுங்கி, முடிவாக தமிழகத்தையும் விழுங்கப்பார்த்தது. இந்த டிவி சீரியலை, பல பெண்கள் பார்த்து, தமிழ் நாட்டு அரசியலை புரிந்துக் […]
இந்திய திருநாடே, தமிழகத்து அரசியல் கோமாளிகளையும், ஏமாளி மக்களையும் பார்த்து சிரிக்கின்றனர். பொறுமையின் உருவம், பன்னீர், அம்மாவின் சமாதியில் தியானம் செய்துகொண்டு, பொங்கி எழுந்தார். உண்மைகளை போட்டுடைத்தார். போயஸ் தோட்டத்து உண்மைகளை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். இதுவரை, அந்த கூட்டத்துட ன் அங்கமாக இருந்தவர், அவரது பதவிக்கு பங்கம் வந்த போது, பொங்கி எழுந்துள்ளார். இது தர்மமா ? நியாமமா? என்று, நம்மை பார்த்துக் கேட்கின்றார். நாம் தான் ,ஆமாம் சாமிகளாச்சே ! ஆமாம், ஆமாம் சாமி என்று […]
இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்தல் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை, ஒரு முஸ்ஸிம் எழுத்தாளர் பதிவு செய்து, அடர்ந்த அனுபவங்களின் வாயிலாக, தஸ்ஸிமா நஸ்ரின் நாவலாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் வெளி வந்தவுடன், அவரை கொல்வதற்கு அவரது நாட்டிலேயே ஒரு கும்பல் அவரை […]
இரா.ஜெயானந்தன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இளைஞர்கள்- மாணவர்கள் ( மாணவிகள் உட்பட), சமூக வெளிக்கு வந்து, ஒரு சமூக நோக்கத்துடன், போராட்ட களத்தில் இறங்கி, ஒற்றுமை உணவுர்வுடன், “ஜல்லிக்கட்டு என்ற, அடையாளத்தை அடைவதற்கு கூடியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு செழிப்பான, அரசியல் பார்வை கிடைக்கலாம் என எண்ண தோன்றுகிறது. “இந்தி எதிர்ப்பு” என்ற ஒரு மொழிக்கொள்கையை, கையில் எடுத்துக்கொண்டு, அன்று திமுக , ஒரு அரசியல் பார்வையோடு, அதனை, பல வழிகளில் செலுத்தி, அதன் மேல்,பார்ப்பன, கீழ்- […]