கு.அழகர்சாமி
(1)
வண்ணங்கள்
கலந்து
வண்ணங்களோடு
தீற்றலில்
ஒளிந்திருக்கிற
நீ
வெளியே வா-
நான்
தீட்டாத
ஓர்
ஓவியமாய்
நீ.
(2)
வண்ணங்கள்
சுழற்றியடிக்கும்
சூறாவளியின்
நடு மைய அமைதியை
அடையும் போது
நீ
ஓர் ஓவியத்தைக்
கண்டடைவாய்
என்கிறாயே-
அப்படித் தான்
உன்னைக் கண்டடையும்
ஓர் ஓவியமோ
நீ?
(3)
ஓர்
ஓவியமாய் இருக்கிற
ஓர்
ஓவியமாய் இருக்கிறாயோ
என் நினைவில்
ஓவியம்
நீ?
கு.அழகர்சாமி
- கோபம்
- நேசம்
- மெஹரூன்
- ஓவியமோ நீ?
- மழை புராணம் – 6 மழை நேரம்
- கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
- அப்பாவின் சைக்கிள்
- சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து
- 2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”