இரா முருகன்

நாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்துநாலு பொ.யு 5000

This entry is part 3 of 6 in the series 17 டிசம்பர் 2023

                                                             பூர்த்தி விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை.  அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த,  நிறம் மங்கிய கருப்புகள்  அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம் போல் ஒட்டியிருந்தன. வீடுகளுக்குள் இருந்து இழுத்து வரப்பட்ட கரப்பு இனப் பெண்கள் விஷவாயு சுவாசிக்க வைக்கப்பட்டு உடல் முறுக்கி இறந்தன. பள்ளிகளுக்குள் […]

நாவல்  தினை        அத்தியாயம் நாற்பத்துமூன்று  பொ.யு 5000

This entry is part 2 of 3 in the series 10 டிசம்பர் 2023

   வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது.  அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து கொண்டதை குழலன் பகடி செய்த பிறகுதான்.  வானம்பாடியின் கட்டிலில் சிறு ஒலி ஏதோ வந்ததில் தொடங்கியது இது. ராத்திரி முழுக்க அவள் புரண்டு படுக்கும் போது வந்த ஒலி என்று ஆறடி தூரத்தில் அடுத்த கட்டிலில் துயின்றிருந்த குயலி சொல்ல, […]

நாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்திரண்டு பு.யு 5000

This entry is part 1 of 2 in the series 3 டிசம்பர் 2023

   சகல இன சஞ்சீவனி ஏற்றுமதிக்காக உருவாக்கி வாங்குவார் இல்லாமல் போன கண்கவரும் தகரக் குடுவைகள் கோகோ பானக் குடுவைகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  மாட்டு ஈக்களின் இறகுகளும், கால்களுமாக மிதந்து கொண்டிருக்கும் திரவம் கறுப்பு வண்டல் கீழே தேங்கியிருக்க மேலே அழுக்கு நெடியும் நிறமுமாக காய்ச்சிக் கிளறப்பட்டபடி எங்கணும் நிறைந்திருந்தது.  சில குடுவைகளில் இருந்து திரவம் கசிந்து அவை வைத்திருக்கும் இடம் முழுக்க பாதாளச் சாக்கடை வாடை தூக்கலாக மேலெழும்பிக் கொண்டிருந்தது.  மெல்ல ஊரும் வாகனங்கள் […]

நாவல்  தினை         அத்தியாயம் நாற்பத்தொன்று  பொ.யு 5000

This entry is part 2 of 5 in the series 26 நவம்பர் 2023

   கோகர்மலை நாடு அமைதியாக இருந்தது. சகல இன சஞ்சீவனி எந்தத் தெருவிலும் யார் வீட்டிலும் உண்டாக்கப்படவில்லை. ஈக்களும். மாட்டு ஈக்களான உண்ணிகளும் சுவர்களில் ஈஷியிருந்தன. பறக்கத் தெரியாதவை போல் அவை சிறகுகளை மெல்லிய ரரரரர ஒலியெழ அதிர வைத்து  செவிப்புலன் மூலம் சூழும் போதையில் அமிழ்ந்திருந்தன.  தெருவில் சாக்கடை போல் சகல இன சஞ்சீவனியை பிரயோஜனமற்றது என்று பலரும் பானைகளில் ஏற்றி உடைத்து புளிவாடை எங்கும் மூக்கில் குத்த, பாதை வழுக்கச் செய்திருந்தனர்.  கூட்டம் கூட்டமாக […]

நாவல்  தினை              உத்தராங்கம்  அத்தியாயம் நாற்பது பொது யுகம் 5000

This entry is part 1 of 3 in the series 19 நவம்பர் 2023

                                                            சகல இன சஞ்சீவனி எங்களுக்கு வேண்டாம். அதைக் கொடுத்த  பெருந்தேளரசரும் எங்களுக்கு வேண்டாம்.  காலையில் இருந்து நடுராத்திரி வரை சாரிசாரியாகச் சகல இனங்களும் தேளரண்மனை முன் கோஷம் முழங்கின. மற்ற இனங்களை விடவும் மும்முரமாகத் தேள் இனம் இந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது.  கரடியின் தலைமையில் துயிலரங்கத்துக்கு முன் பத்து பன்றிகளும், இருபது கழுதைகளும் பத்து நாய்களும் கோஷம் முழக்கி கற்களை விட்டெறிந்தன.  கரடியின் பொதுக்கூட்டச் சொற்பொழிவில் இருந்து – குழலன் என்ற […]

நாவல்  தினை       அத்தியாயம் முப்பத்தொன்பது  பொ.யு 5000

This entry is part 1 of 3 in the series 12 நவம்பர் 2023

   நீலன் வைத்தியர் நடு ராத்திரிக்கு எழுந்தார். பேய் உறங்கும் நேரம் அது.  இவர் அசல் நீலன். காஸ்மாஸ் பிரபஞ்சத்தின் அங்கமான நம் புவியுலகின்  ஒரே நீலன் வைத்தியர் இவர்தான். இவரை போலி செய்து அண்மையில் இறந்துபோனவர் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து பிரதி நீலன். கசாப்புக் கடைக்காரராக இங்கே வந்து ராசியான வைத்தியராகப் பரபரப்பாக நடமாடுகிறவர் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து பிரதி நீலன்.  ஆல்ட் க்யூ பிரதி நீலனுக்கு, அசல் நீலன் உயிரோடு இருப்பது தெரியாது. அவருக்கு […]

தினை       அத்தியாயம்  முப்பத்தெட்டு     பொ.யு 5000

This entry is part 6 of 8 in the series 5 நவம்பர் 2023

கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை.   அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு துர்நாற்றத்துக்கும் காரணம் என்று தெரிய வாய் திறந்து வாச்சி வாச்சியாக நான்கு வரிசை மஞ்சள் பல் காட்டி ஏன்யா என்று ஒரு பிசாசு சத்தம் தாழ்த்தி அழைத்தது. கர்ப்பூரம்   பின்னால் இருக்கிற யாரையோ கூப்பிடுகிறது […]

  நாவல்  தினை              அத்தியாயம்   முப்பத்தேழு  பொ.யு 5000

This entry is part 2 of 5 in the series 29 அக்டோபர் 2023

   நான் வேணு.  பொது யுகம் ஐயாயிரத்தில் பிறந்து  சகல இனநல அரசில் குடிமகனாக உள்ளேன். அந்த சொற்றொடரை எடுத்து விடலாம். மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். நான் வேணு. இல்லை வாசு. அதுவும் இல்லை. நான் காசி. மாரி. ராஜு. சாமி. என்ன வேண்டுமானாலும்  வைத்துக் கொள்ளுங்கள்.  பெருந்தேளரசர் ஆட்சி செய்யும் கோகர்மலை சார்ந்த விரிந்து பரந்து நீளும் நிலப்பரப்பில் வசிக்கும் சாதாரண குடிமகன் நான். நான் இருக்கும் நையாண்டி ராஜ்ஜியத்தின் ஏறுமாறும், கோமாளித்தனமும், அராஜகமும் பற்றி […]

 நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்தாறு   பொ.யு 5000

This entry is part 2 of 2 in the series 22 அக்டோபர் 2023

   நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார்.  கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து  அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது.  நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம் 5000க்கு வந்திருக்கிறார்.   பெருந்தேளார் விருப்பப்படி சகல நோயும் போக்கி […]

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

This entry is part 4 of 4 in the series 15 அக்டோபர் 2023

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000 அதிகாரபூர்வமாக   ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடைக் காரர் நீலன் மூலிகை மருந்து உருவாக்கி  வெற்றி பெற்றது பெருந்தேளரசால் அறிவிக்கப்பட்டது. அது இப்படி இருந்தது – ஒரு வாரம் முன் துயிலரங்கத்தில் விழித்து எழுந்த வினாடி முதல் நீலன் மும்முரமாக ஆயுள் நீடிக்கும் மருந்து சஞ்சீவினி உருவாக்குவதில் இருக்கிறார். (மேலும்) பிரபஞ்சப் பேரரசர் பெருந்தேளர் அனைத்து உதவிகளும் அவருக்கு ஈந்து தன் […]