விளையாட்டு

பார்வையாளர்கள் குறித்த பதட்டங்கள் ஏதுமின்றி ஒரு விளையாட்டு துவங்கியது கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ வரைபடங்களில் மிளிரும் நாடுகள் மீதும் நகரத் துவங்கியது தேச நலனுக்கு பெரும் குந்தகம் வந்ததென கமிட்டிகளை நியமித்தது அரசு புத்தி ஜீவிகள்…

கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…

தன்னில் பயணித்த நீரோடைகளின் தடயங்களோடிருக்கும் மணல்பரப்பில் திரண்டிருந்த ஆடுகளோடு உரையாடினார் சிலுவையில் அறையப்பட வேண்டியவன்தான் பாவிகளை ரட்சித்து பாவமூட்டையின் சுமைதாங்கி நின்றேன் என் வழித்தடங்கள் புனிதமாக்கப்பட தேர்ந்த மேய்ப்பாளனானேன் அப்பங்கள்களை சகலருக்கும் பகிர்ந்து தொடுதலில் சுகப்படுத்தும் சிகிச்சை நிபுணன்தான் மனக்கசப்பும் வருத்தமுமின்றியே…

கூந்தல்

உடல் நொறுங்கி சரிய சபை அதிர்ந்தது சூதாடி தலைதொங்கியவன்களின் முகம் உமிழ்ந்த எச்சிலால் சபதம் நிறைவு கொள்ள பற்றி இழுத்தவனின் தொடை ரத்தம் பூசி முடிந்த கூந்தலுள் ஆதிக்க அழுகளின் வீச்சம் பெருக நீராடி கேசம் நீவிய துரோபதையை பிறப்பித்தது குளித்து…

பரிகாரம்

காதறுந்த வீடுகள் கலையா துயிலில் சுகித்திருக்க பனிபோர்த்திய மைய இரவில் குறி இசைத்தான் கெட்டகாலம் பிறக்க கெடுதிகள் நடக்குமினி நோய்மை மனிதர்களையும் கடந்த பிணமும் கண்டு கற்றறிய பற்றற்றுப் போன போதியாய் உன் மகனும் தேசாந்திரியாவான் முதிர்ந்த உடல் கிடத்தி நிம்மதிக்கான…

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…

சடசடவென பொழிந்த மழைக்குப் பின்னான புழுக்கம் சரசரவென அடித்த காற்றால் தின்றழிக்கப்படுகிறது ஒன்றை எப்பொழுதும் வேறொன்று வீழ்த்தக் காத்திருக்க வருத்தமெதற்கு வளரும் தொப்பை குறித்து பாரம் சுமக்கும் உடல் அறியும் பருமன் குறைக்கும் ரகசியங்களை மெலிந்த தேகத்தோடு இருந்தவன் உரையாடிக் கொண்டிருந்தான்…

தீட்டுறிஞ்சி

தூர்த்த குளக்கரையிலிருந்து வந்த விசும்பலின் துயர்வெடிக்கக் கலைந்த தூக்கத்தின் எரிச்சலோடு இடம் அடைய அதிர்ந்தேன் எழுப்பிய தூண்களிடையே நின்றிருந்தாள் குலசாமியான செல்லியம்மன் யாது துயர் தாயே மண்டியிட்டேன் அவளும் மண்டியிட்டு தலைநிமிராது நாப்கீன்கள் படைக்க வேண்டினாள் வீடு திரும்ப நினைத்துக்கொண்டேன் பெரியாயிக்கு…

நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்

- எள்ளளவும் சந்தேகமில்லை எளிதில் நீங்கள் மன்னித்துவிடுவீர்கள் காலகாலமாய் அதற்காகத்தான் பழக்கப்படுத்தப்பட்டீர்கள் இருக்கக்கூடும் உங்களின் பெரும்தன்மையாக அதுதான் எங்களுக்கான மூலதனமும் கச்சாப்பொருளும் நம்பிக்கையுண்டு அழைக்க பின்தொடர்வீர்கள் மந்தைகளாக அற்புதங்கள் நிறைந்தது என்றிட முள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள் கடந்தபின் நீங்கள் கண்டது…