சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் […]
வளவ. துரையன் என் தோழனே!நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை.மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை.என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை.நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு.உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு.அதுவே போதும்
ஹிந்தியில் : சந்தோஷ் அர்ஸ் தமிழில் : வசந்ததீபன் — கிடைத்து இருக்கிறது பார்வை கொஞ்சம் பார் சற்று பார்த்தால் இந்த பூமி, ஆகாயத்தின் நீலம் , நட்சத்திரங்கள் சூடிய இந்த இரவின் வானம் இவை மலைகள் , நதிகள் , அருவிகள் , பரந்த கடல் இந்த காட்டாறுகள் , ஏரிகள், மரங்கள் , அழகான புல் மைதானங்கள், ஏரிகள் _ தால் _ஸர்_ அனுபம் மற்றும் பூக்களின் இந்த அழகான பள்ளத்தாக்குகள் _ பார் […]
ஆர் வத்ஸலா ஒரு காலத்தில்எனக்கு நண்பனாகஇருந்தான்எப்போதாவது சந்திப்போம்எப்போதாவதுபேசுவோம்புலனத்தில்குறுஞ்செய்தி பரிமாற்றம் அடிக்கடிமனைவியைப் பற்றிமகளைப் பற்றி அன்புடன் பேசுவான்அவன் மேல்எனக்கிருந்ததுஅன்பும் மதிப்பும்என் காரணமாகஎன் குடும்பத்தினருக்கும்பிறகுகாரணம் சொல்லாமல்வந்ததுஅவனதுமௌன விலகல்என்னை வருத்திக் கொண்டு நீண்ட மௌனத்திற்குப்பிறகு வரத் தொடங்கினநட்புக்கு கல்லறை கட்ட மறுத்துநான் பிடிவாதமாகஅனுப்பக் கொண்டிருந்த குறுஞ்செய்திகளுக்குஎதிர்வினைகள்மரியாதை நிமித்தம் அனுப்பப் பட்டவை என்று பறை சாற்றிக் கொண்டுமறுக்கிறேன் நான்தான்முதல் கல்லை வைக்கவிடுதலைக்கான முதலடி அதுதான்என்றறிந்திருந்தும்
மீனாக்ஷி சுந்தரமூர்த்தி அந்த கிராமத்திற்குள் ஜட்கா வண்டி வருவது எப்போதாவதுதான், ஈசுவரன் கோவில் தெருவில் தடக் தடக் என்று வண்டி திரும்பியது உழவு மாடு ஓட்டிக்கொண்டு தோளில் கலப்பை ஏந்தி வயலுக்குப் போகிறவர்களும், வெற்றிலைக் கொடிக்காலில் வெற்றிலை பறிக்கப் போகிறவர்களும் யார் வீட்டிற்கு? என்று நிதானித்தார்கள். கிணற்றிலிருந்து நீர் சேந்திக் கொண்டிருந்தவர்கள் , அடுப்பில் காபி கொதிக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று பெண்களும் வாசலுக்கு வந்து பார்த்தனர்.’பட்டாளத்துக்காரர் மாதிரி இல்ல இருக்கு’ என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே […]
சசிகலா விஸ்வநாதன் பம்பரம் சுற்றிச் சுழன்று விழும். பூ கோளம் தன் சுழற்சியில் என்றும் சுழலும். வரையருத்தது இறையன்றோ! நாள் ஒன்று கூடுவது கணக்கின் விதி நாம் அறிந்தோ; அறியமலோ கணக்கன் விடும் புதிர். புதிரை புரிந்தும் புரியாமலும் தான் புவி மேல் நாம் இன்னும் இருக்கிறோம்
வசந்ததீபன் ஒன்று___________ நான் மனிதன் அல்ல ஐயாமிருகமாக இருக்கிறேன்இரு கால் மிருகம்அதைப் பேச்சு வார்த்தையில்மனு புத்ரன் _ அம்மாவைப் புணர்பவன் _ அக்காவைப் புணர்பவன் _இழி சமூகம் எனச் சொல்கிறான். எல்லா நாட்கள் _மாடுகளைப் போல உழுகிறதற்குகை நிரம்ப பார்லிகூலியாகக் கொடுக்கிறான். வாய் திறந்தால்கோபமாய் பார்க்கிறான்பழமொழியை உருவாக்குகிறான்எறும்பு எப்போது இறக்கிறதோசிறகுகள் வளர்கின்றன அதற்கு என்றுஇறப்பதற்காகத்தான் முண்டம்கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்தது என்றுஹு…ஆ…ஹு… ஆ…செய்கிறான். பஞ்சாயத்து தலைவன் என்றுவட்டாரத்தின் போலீஸ்என்னுடைய உறவின சகோதரர்கள் இருக்கிறார்கள் என்றுபைத்தியம் என்று _பொதுவான மற்றும் […]
ஆர் வத்ஸலா அன்றைக்குள் மென்பொருளை முடித்துபயனாளி நிறுவனத்திற்குஅனுப்பி வைக்க வேண்டுமென்றுமேலதிகாரி உத்தரவிட்டதால்நள்ளிரவு தாண்டி கிளம்பிய என்னைஎன் இரு சக்கர வாகனம்பழக்க தோஷத்தில்மேய்ச்சலுக்கு பின்தன்னிச்சையாகவீடு திரும்பும்பசுக்களைப் போல்என்னிடம் எதுவும் கேட்காமல்விளக்குகள் எரியாதவெறிச்சோடிக் கிடந்தஎன் தெருவுக்குகொண்டு சேர்த்ததுகவலையில்லாமல்முன்னேறிய நான்தெரு முடிவில்கவனித்தேன்ஒரு காவல்துறை அதிகாரியைகொஞ்சம் பயமாக இருந்தது
ஹிந்தியில் : நவீன் ராங்கியால் தமிழில் : வசந்ததீபன் _______________________________ கிணற்றிலிருந்து வாளிகள்இழுத்து _ இழுத்துஅவர்கள் கயிறுகளாகமாறிப் போனார்களமற்றும் உடைகளின் தண்ணீர்பிழிய __ பிழியத் தண்ணீராக ஆகிப்போயின பெண்களின் கைகள்நான் வெப்பமான மத்தியானங்களில் அவர்களை எனது கண்களின் மீது வைத்து இருந்தேன்வேப்பமரத்தின் குளிர்ந்த இலைகளைப்போலதண்ணீரில் இருக்கிற போதுஅவர்களுடைய கைகள்உருக ஆரம்பித்ததால்அவர்களுக்குஅடுப்புகள் எரிப்பதற்கான வேலைஒப்படைக்கப்பட்துஅதனால் அவர்களின் ஆன்மாவிற்குவெப்பம்கிடைத்து கொண்டிருக்கிறது என்று இல்லைஅதனால்நெருப்போடுபெண்களின் நெருக்கம் உண்டாகிக் கொண்டிருக்கிறது மேலும் அவர்கள் ஊதுகையில் அவைகள் எளிதாக எரியும்நான் எப்போதும் நெருப்பை பார்க்கிறேன்அப்போது எனக்கு பெண்களின் […]
ஆர் வத்ஸலா தினமும் ‘பீச்’ வரை நடை பயிற்சி சதை, சர்க்கரை குறைக்க இயற்கையை ரசிக்க எல்லாவற்றிற்குமாக காலை நனைத்துக் கொண்டு மணல் மீதே எழுப்பப் பட்ட ஒரு சிறு ஆலயத்தில் அமர்ந்திருந்த அம்மனுக்குக் கடமைக் கும்பிடொன்று போட்டு விட்டு திரும்பிய போது தீடீரென முளைத்து என்னை பின் தொடர்ந்தது அந்த சின்னஞ்சிறு பூனைக்குட்டி துரிதமாக நடந்தேன் வலுப்பெறா குட்டிக் கால்களுடன் வேகமாக பின் தொடர்ந்தது அதுவும் அதற்கு என்னை பிடித்திருந்தது என்பது எனக்கு பெருமையாகத் தான் […]