இந்தியர் பலரின் வாழக்கையை உலுக்கிப் போட்ட, போட்டுக் கொண்டிருக்கும் பண மதிப்பிழப்பு, காதலர் தினக் கொண்டாட்ட எதிர்ப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை … எனப் பிரச்னைகள் சிலவற்றைக் கதைகளாக்கிப்பார்த்திருக்கிறார் ஜனநேசன். சித்தாள் வேலைக்குப் போய் கீழே விழுந்து, அதனால் இடுப்பொடிந்து வயிற்றுப் பிழைப்புக்காக அதிகாலை இருட்டில் குப்பை திரட்டிப் போடும் வேலை பார்க்கிறவனுக்கு ஒருநாள் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைத்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மகிழ்ச்சிக்குப் பதில் கவலையையும் கலவரத்தையும் அளித்ததைக் ‘காரணம் அறிகிலார்’ என்ற தலைப்பில் […]
இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். இதுவரை உடுமலை நாராயண கவி இலக்கிய விருது பெற்றோர் சுளுந்தி […]
சபா தயாபரன் ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள போஸிடான் 2M39 டோர்பெடோ( Poseidon 2M39 torpedo) என்னும் ஏவுகணையானது மணிக்கு 10,000 கிலோ மீட்டர் வேகத்துடன் கடலின் அடியில் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் கடலின் அடியே அணுகுண்டுகள் பொறுத்தப்பட்ட இந்த ஏவுகணையானது ஏவப்படும்போது இதில் இருந்து வெளிப்படும் ரேடியோ கதிர்வுகளின் அதிர்வுகள் பெரிய அலைகளை ஏற்படுத்தி செயற்கையான சுனாமியை ஏற்படுத்தும் என்று அறியப்படுகின்றது. பல மெகா தொன் போர்க்கப்பல் […]
பி.எஸ் ராமையாவின் ‘மலரும் மணமும்’ அழகியசிங்கர் நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி. இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார். சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா கதைஞன். அவரை போன்ற மேதைப் படைப்பாளிகள்தான் எதிர்கால இலக்கியத்துக்குத் தேவை. ராமையாவின் கதையான ‘மலரும் மணமும்’ கதையைப் படித்துப்பார்த்தேன். சி சு செல்லப்பா அப்படிக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. பொதுவாக […]
கௌசல்யா ரங்கநாதன் -1-அந்த அதிகாலை வேளையில் என் பக்கத்து ஃஃப்ளாட் நீரஜா, இன்றைக்கெல்லாம் இருந்தால் 45 க்குள் இருக்கும், வயது. திருப்பாவை முதல் பாடலை அதாவது “மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாளால்” என்று தொடங்கும் ஆண்டாள் பாசுரம்தனை பாடியதைக்கேட்டபோது என் மனம் 60 வருடங்களை கடந்து போனது ஒரு நொடியினில். தந்தையை இழந்து, பள்ளி படிப்பை அப்போதுதான் முடித்திருந்த நான் தாய் வழி பாட்டன் கிராமமான வலிவலத்தில் தாய், தம்பியுடன் அடைக்கலமாயிருந்த போது இது […]
அழகியசிங்கர் புதிய புத்தகம் பேசுது என்ற ஏப்ரல் மாத இதழ் என் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டுத் திரும்பவும் படிக்கலாம் என்று வைத்துவிடுவேன். ஆனால் இந்த முறை முழுவதும் படித்தேன். இது ஒரு அருப்புக்கோட்டை சிறப்பு இதழ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆசிரியர் முத்துகுமாரியுடன் ஒரு பேட்டி. இவர் ஒரு ஆசிரியை. பாடம் நடத்தும்போது குழந்தைகளிடம் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறுவதாகப் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் பேட்டியில் எனக்கு […]
அழகியசிங்கர் இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை. ஏன்? உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். ஆத்மாநாம் உயிரோடு இருந்தபோது நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன். ஒரு முறை கவிஞர் வைத்தியநாதனுடன் ஆத்மாநாமைச் சந்தித்திருக்கிறேன். வேறு ஒரு நண்பர் வீட்டிற்குப் மூவரும் போனோம். அப்போதுதான் நான் ஆத்மாநாமிடம் அந்தக் கவிதையைப் பற்றி அர்த்தம் கேட்டேன். நிஜம் நிஜம் நிஜத்தை நிஜமாக […]
அழகியசிங்கர் எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் (02.04.2021) என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன். ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம் அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு நாவலும் கூட. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில். ‘தாத்தா காலத்து பீரோ’ என்ற அவருடைய சிறுகதைப் புத்தகம் […]
நடேசன் – அவுஸ்திரேலியா —————————————————————————— இளமைக்காலத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்தபோது, என்னைக் கவர்ந்தது என்னவென்றால், அக்காலத்தில் சிவாஜி ரசிகனாக இருந்த எனக்கு மத்திய வயதான ஒரு வருக்கு இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது. இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில் அதனை தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு பலர் எழுதியதைப் படித்தபின்பு, மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல, படு […]
1. கவிதை விற்றவனின் பிரதிகள் காலவிதை உருமாற்றிய பிம்பம் தன்னைத் தேடி காலம் தொலைத்து காலமாகி கரைந்துபோக… முடிவில்லா வெளியில் தானுமாகி அவையுமாகி அவளுமாகி … நீக்கமற நிறைந்த ஏதோவொன்றின் மறுபிரதி நான். 2. எனக்குள் இருக்கும் என்னை என்ன ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை எப்படி ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை நான் அறிந்துகொள்ள அன்றாடம் மறவாமல் பேசும் அந்தப் படிகட்டுகளுக்கும் தெரியும் அவளோடு பயணித்த […]